வேலூர் வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் கங்குந்தி வனப்பகுதியில் உள்ள மலையில் இருந்து மினி லாரி விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
சித்தூர் மாவட்டம்குப்பம் பகுதியில் இருந்து வேலூருக்கு மாங்காய் ஏற்றி வந்த மினி லாரியில் மொத்தம் 13 பேர் பயணம் செய்தனர். இதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மினி லாரியில் சிக்கியுள்ள 3 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.