Skip to main content

பிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

 

கடந்த முறை திருச்சியில் தேசம் காப்போம் பொதுக்கூட்டத்திலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இந்த முறை தேசம் காப்போம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்காக வழக்கு தொடுத்தனர்.

ஆரம்பத்தில் நீதிமன்றமும் அனுமதி மறுத்த நிலையில் 3000 பேர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று திருச்சி மாநகர செயலாளர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எம்ஜிஆர் நசிலையிலிருந்து உழவர் சந்தைக்கு பேரணியாக செல்வது என அனுமதி கொடுக்கப்பட்டது.

ஆனால் திருச்சி உளவுத்துறை போலீஸோ லட்சக்கணக்கில் திரளுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூலு தகவல் கொடுத்ததால் அவர் நீதிமன்றம் மூலம் வாங்கின அனுமதி இடத்தை மறுத்து இரவோடு இரவாக திருச்சியின் புறநகர் பகுதியில் சில இடங்களில் காண்பித்தார்.

கடைசியில் திருச்சி மதுரை பழைய பைபாஸ் சாலையில் பேரணிக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். கடைசி நேரத்தில் திருச்சி மாநகரம் போக்குவரத்து நெரிசலுக்குட்படாத வகையில் விடுதலைச்சிறுத்தைகளின் பேரணியில்‌ பாதை மாற்றம் செய்யப்பட்டது.

பேரணி திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் பஞ்சப்பூர் என்னும் இடத்தில் வலதுபுறமாக பிரியும் பழைய மதுரை சாலையில் ஆர் சி நகர் கூட்டுச் சாலையில் இருந்து பேரணி புறப்பட்டது. ரயில்வே பாதையை கடக்கும் மேம்பாலத்தின் வழியாக பேரணி காவல்துறை குடியிருப்பு வரை சென்றது.

ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த பேரணி நடைபெற்றது. ஆர் சி நகர் கூட்டு சாலை எடமலைப்பட்டி புதூர் பகுதியாகும். அங்கே கிறிஸ்தவ பள்ளியில் இருந்து தான் பேரணி துவங்கியது. 3.30 மணிக்கு புறப்பட்ட பேரணி 6.00 மணிக்கு முடியும் இடத்திற்கு வந்தது.

பேரணி முழுவதும் திருமாவளவன் திறந்த வேனில் மேலிருந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே வந்தார்.

பேரணியில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரணியில் பேசிய திருமாவளவன்,
 

இட ஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும். இரண்டு மாதங்களாக முஸ்லிம்கள் மட்டுமே இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்ற மாயையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிப்பட்ட முறையில் லட்சக்கணக்கில் இந்த சட்டத்திற்கு எதிராக கோஷம் போட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம் என்றால் நாங்கள் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் பிள்ளைகள். பதவி வெறி பிடித்தவர்களாய் இருந்திருந்தால் மோடியின் காலடியிலும் எடப்பாடியின் காலடியில் கிடந்து இருப்போம். பாஜக தேர்தல் கட்சி அல்ல அதை பின்னால் இயக்குவது ஆர்எஸ்எஸ் என்கிற இயக்கம். அந்த இயக்கம்தான் காந்தியடிகளை சுட்டுக் கொண்டு இயக்கம்.

3,000 கோடி செலவு செய்து சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வான் உயர சிலை வைத்திருக்கிறார்கள். அந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தடை சொன்ன இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். கோமணம் கட்டி இருக்க வேண்டிய திருமாவளவன் நெஞ்சை நிமிர்த்தி மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறார். காரணம் அரசியலமைப்பு சட்டம் வகுத்த அம்பேத்கர்.

ஆர்எஸ்எஸ்க்கு உண்மையில் யார் மீது வெறுப்பு என்றால் முஸ்லிம் மீது அல்ல, கிறிஸ்தவர்கள் மீது அல்ல, நம் மீது அல்ல, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தான். அரசியலமைப்பு சட்டம் இல்லை என்றால் நாம் யாரும் இதில் நடமாட முடியாது. என்றார்.

இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து அலை அடிப்பது போல் லட்சக்கணக்கில் விடுதலை சிறுத்தை தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி நடந்து வந்த திருச்சியின் பழைய மதுரை சாலையில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடி இருந்ததால் அந்த சாலைக்கு விடுதலை சிறுத்தை சாலை என்று பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.