Skip to main content

அரசு புறம்போக்கு நிலத்திற்காக அருந்ததியர் இன இளம் பெண் அடித்துக்கொலை

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் காட்டு தெள்ளுர் கிராமத்தில் அரசு புறம்போக்கு நிலம் சுமார் 70 சென்ட் தலித் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, வெங்கடேசன் தம்பதியினர் மற்றும் சில அருந்ததியர் குடும்பங்களின் அனுபவ உரிமையில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
 

 Sethupattu


 

இதே பகுதியில் 4 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வரும் பிற சாதியை சேர்ந்த சிலர், அருந்ததியர் மக்களின் அனுபவத்தில் உள்ள புறம்போக்கு நிலத்திற்காக அம்மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மங்களம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை. 

 

இந்நிலையில் 15.2.2020 ந்தேதி இரவு, வீடு புகுந்து அருந்த்தியர் இன பெண்ணான சசிகலாவை ஐந்து பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

இதுதொடர்பாக தகவல் கிடைத்ததும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் செல்வன் தலைமையில் சென்ற குழுவினர் விசாரித்து புகார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் மற்றும் கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

இதுதொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பிணை கிடைத்தாத வகையில் விசாரணையை விரைந்து முடித்திட வேண்டும். சம்மந்தப்பட்டவர்களுக்கு அனுபவ பாத்தியம் அடிப்படையில், அரசு புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வழங்கப்படுவதோடு அரசு வீடு  உடனடியாக கட்டித்தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி விரைவில் போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் பங்க் மேலாளர் மீது தாக்குதல்; திருவண்ணாமலையில் பரபரப்பு

Published on 25/12/2023 | Edited on 25/12/2023
incident for petrol station manager in Tiruvannamalai

திருவண்ணாமலை வேலூர் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது திருச்செந்தூர் பெட்ரோல் பங்க். இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை  (24.12.2023) இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு இளைஞர்கள் வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு பணத்தை இவர் கொடுப்பார் அவர் கொடுப்பார் என மாறி மாறி கூறியதையடுத்து பெட்ரோல் பங்க் ஊழியருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் பெட்ரோல் பங்கில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதை அறிந்த மேலாளர் தனது அறையில் இருந்து வெளியே வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மற்றும் மேலாளரை மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து 30 நிமிடங்கள் கழித்து மீண்டும் தனது நண்பர்களுடன் பெட்ரோல் பங்குக்கு கையில் அரிவாளுடன் வந்த இளைஞர்கள் மேலாளர் ரகுராமனை அறிவாளால் சரமாரியாக தாக்கியதில் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீசாருக்கு கொடுத்த தகவலினல் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்துச் சென்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

பெட்ரோல் போட்டு விட்டு பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறு இளைஞர்கள் பெட்ரோல் பங்க் மேலாளரை அறிவாளால் சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நகரத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்க்குகளும் இந்த சம்பவத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெட்ரோல், டீசல் போடமுடியாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

Next Story

பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி ரவுடி படுகொலை; 6 பேர் நீதிமன்றத்தில் சரண்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
chennai corporation office near premkumar incident 6 people surrendered in court

சென்னை வால்டாக்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (40). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட சேட்டு என்பவரது கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக பிரேம்குமார் கைது செய்யப்பட்டார். மேலும், யானைக்கவுனி காவல் நிலையத்தில் ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இருக்கிறது. சேட்டு கொலை வழக்கில் பிரேம்குமார் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.

இந்த நிலையில், சேட்டு கொலை வழக்குக்காக பிரேம்குமார் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் நீதிமன்றத்திற்கு நேற்று (19-12-23) வந்து ஆஜரானார். அதன் பின்னர், அங்கிருந்த தனது உறவினர்களான நரேஷ், வசந்த் ஆகியோருடன் ரிப்பன் மாளிகை எதிரே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், பிரேம்குமாரை சுற்றி வளைத்து தாங்கள் கொண்டு வந்திருந்த பட்டாக்கத்தியால் ஓட ஓட சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற நரேஷ் மற்றும் வசந்துக்கும் வெட்டு விழுந்தது. அதில், பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

பிரேம்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேம்குமாரின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயமடைந்த நரேஷ் மற்றும் வசந்த் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, இந்த கொலை சம்பவம் தொடர்பாக பெரியமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேட்டு கொலைக்கு பழிக்கு பழி வாங்க பிரேம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், அவரைக் கொலை செய்த குற்றவாளிகள் அடையாளம் தெரிந்துள்ளதாகவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பட்டப் பகலில் 6 பேர் கொண்ட கும்பல் கொலை செய்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட துரை, சஞ்சய் உள்ளிட்ட 6 பேர் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிவசங்கர், சாந்தகுமார், நாராயணன், சரவணன், குமார் மற்றும் மணிகண்டன் ஆகிய 6 பேர் பொன்னேரி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர்.