Skip to main content

நிலத்தகராறில் தந்தையை வெட்டிக்கொன்ற மகன்; நண்பருடன் கைது

Published on 25/08/2022 | Edited on 25/08/2022

 

 

land father and son incident police namakkal district

 

கொல்லிமலை அருகே, நிலத்தகராறில் பெற்ற தந்தை என்றும் பாராமல் கொடுவாளால் மகனே 
வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   

 

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வளப்பூர் நாடு கீழ் செங்காட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி லதா. இவர்களுக்கு ராஜ்குமார் (வயது 27) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  

 

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு லதா இறந்து விட்டார். அதையடுத்து, உள்ளூரைச் சேர்ந்த பேபி என்பவரை செல்வராஜ், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். செல்வராஜூக்கு சொந்தமாக 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.  

 

இந்த நிலத்தை பாகம் பிரிப்பது தொடர்பாக தந்தைக்கும், மகனுக்கும் மோதல் இருந்து வந்தது.  உறவுக்காரர்கள் பஞ்சாயத்து பேசிப்பார்த்தும், அவர்களுக்குள் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.

 

இது ஒருபுறம் இருக்க, சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் ராஜ்குமார், தனக்குச் சேர வேண்டிய  சொத்தை பாகம் பிரித்துக் கொடுக்காமல் தந்தை ஏமாற்றி வருவதாக ராஜ்குமார் ஒரு புகார் 
அளித்திருந்தார்.  

 

இந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக ராஜ்குமாரையும், அவருடைய தந்தையையும் காவல்துறையினர் சேந்தமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து இருந்தனர். அதன்பேரில், ஆக. 23- ஆம் தேதி தந்தை, மகன் இருவரும் விசாரணைக்குச் சென்றனர். பிறகு, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரிப்பதாகச் சொல்லி அனுப்பி விட்டனர்.

 

இதையடுத்து தந்தையும், மகனும் தனித்தனியாக வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தனர். கொல்லிமலை இரண்டாவது கொண்டை ஊசி வளைவு அருகே செல்வராஜ் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ராஜ்குமார், அவருடைய நண்பர் தினேஷ்குமார் ஆகியோர் வழிமறித்தனர்.

 

பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கொடுவாளால் செல்வராஜை சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.  

 

இதுகுறித்து தகவல் அறிந்த வாழவந்தி நாடு காவல்நிலைய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். உடற்கூராய்வுக்காக சடலத்தை, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

நிலத்தகராறு தொடர்பாக செல்வராஜை அவருடைய மகன் ராஜ்குமார் மற்றும் அவருடைய நண்பர் தினேஷ்குமாரும் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.  

 

இருவரும் உள்ளூரில் ஒருவர் வீட்டில் பதுங்கி இருந்ததை அறிந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.