Skip to main content

லலிதா ஜூவல்லரி கொள்ளை... திருவாரூர் சீராத்தோப்பில் 5 பேரிடம் விசாரணை

Published on 04/10/2019 | Edited on 04/10/2019

திருச்சியில் உள்ள பிரபல நகைக் கடையான லலிதா ஜூவல்லரியில் 13 கோடி மதிப்புடைய நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று இரவு திருவாரூரில் 5 கிலோவுடன் முதல் நபரை கைது செய்தனர்.   

pp


நேற்று இரவு திருவாரூர் கமலாம்பாள் நகரில் சந்தேகத்திற்கிடமாக பைக்கில் சென்ற இருவரை பிடிக்கும் பொழுது ஒருவர் தப்பிச் சென்றுவிட்டார். மணிகண்டன் என்ற நபர் மட்டும் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். அவரிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகள் பிடிபட்டன. அந்த தப்பி ஓடிய நபர் திருவாரூரைச் சேர்ந்த சீர்தோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பது தெரியவந்தது.

மணிகண்டனை கைது செய்து திருவாரூர் நகர் காவல் நிலையத்தில் வைத்து நேற்று நள்ளிரவு வரை போலீசார் விசாரணை செய்தனர். அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட மணிகண்டன் திருச்சி கொண்டு செல்லப்பட்டார். மேலும் தப்பி ஓடிய சுரேஷ் சீராத்தோப்பை சேர்ந்த  பிரபல கொள்ளையன் முருகனுடைய மைத்துனர் என்பது தெரியவந்துள்ளது.


 

pp

 

இதனையடுத்து இந்த கொள்ளையில் 5க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்திருக்கும் நிலையில் தொடர்ந்து சீராதோப்பு பகுதியை சேர்ந்த சுரேஷின் குடுப்பத்தாரான தாயார் கனகவல்லி, மாரியப்பன், ரவி, குணா  ஆகிய 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. திருச்சி கிரைம் எஸ்பி மயில்வாகனன் தலைமையில் தனிப்படை போலீசார் இன்று அதிகாலை 4 மணி அளவில் இருந்து  ரகசியமான  இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். 

 

pp

 

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து திருவாரூர் நகரம் முழுவதும் ரகசிய போலீசார் அந்தந்த இடங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு வாகனமும் தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. 

இந்த கொள்ளைச் சம்பவம்  முருகன் தலைமையில் தான் நடந்திருப்பதாகவும், முருகன் பல்வேறு மாநிலங்களில் ஏடிஎம், வங்கி போன்ற இடங்களில் திருட்டில் ஈடுபட்டவன் என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல் இந்த கொள்ளை சம்பவத்தில் 8 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும்  நிலையில் மணிகண்டனை கைது செய்துள்ளனர். மற்ற 7 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.