Skip to main content

லட்ச லட்சமாய் அபதாரம்... கலெக்டர் போடும் அதிரடி ஃபைன்...

Published on 19/10/2019 | Edited on 19/10/2019

கடந்த மூன்று நாட்களாக ஈரோடு கலெக்டர் சி.கதிரவன் ஈரோடு மாநகராட்சியில் நேரடியாக களமிறங்கி நடந்தும் சைக்கிளிலும் சென்று ஒவ்வொரு வீதியாக டெங்கு கொசு உற்பத்தியாகும் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருக்கிறதா என்பதை நேரில் ஆய்வு செய்து வருகிறார்.

 

 Lakhs of lakhs of money ... Collector's Action Fine ...

 

இதில் உடன் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஊழியர்களும் செல்கிறார்கள். ஈரோடு என் ஜி ஓ காலனி பகுதியில் இங்கிருந்த ஒரு மைக்ரோ பயாலஜி லேப் நிலையத்திற்குள் சென்ற கலெக்டர் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஆராய்ந்து பார்த்தார். அதில் சுகாதாரமற்ற வகையில் ஆய்வுக்கு வந்த மாதிரி பொருள்கள் இருப்பதை கண்டதோடு மேலும் தேங்கியிருந்த தண்ணீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதை உறுதிப்படுத்தினார். உடனே மைக்ரோ பயாலஜி லேப் உரிமையாளரிடம்  சுகாதாரத்தை ஆய்வு செய்யவேண்டிய நீங்களே டெங்கு கொசுவை உற்பத்தி செய்வது சட்டப்படி தவறில்லையா எனக்கூறி ஒரு லட்சம் அபதாரம் என நோட்டீஸ் கொடுத்து வந்தார்.

 

 Lakhs of lakhs of money ... Collector's Action Fine ...


அடுத்து அப்பகுதியில் இயங்கி வந்த ஒரு அசைவ உணவகத்திற்கு சென்ற கலெக்டர் அங்கு உணவு சமைப்பதில் இருந்து மக்கள் சாப்பிடும் இடம் வரை ஆராய்ந்து பார்த்ததில் டெங்கு கொசு உற்பத்தி ஆகும் அளவுக்கு சுகாதாரமற்ற முறையிலும் தண்ணீர் தேங்கி இருந்ததையும் கண்டு அந்த உணவகத்திற்கு ஒரு லட்சம் அபதாரம் விதித்ததோடு அந்த உணவகத்தை யும் பூட்டி சீல் வைத்தார். அதேபோல் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் தொட்டிகளை ஆய்வு செய்து கொசு உற்பத்தி ஆகக்கூடிய தண்ணீர் தொட்டிகளை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியதோடு ஆயிரம் இரண்டாயிரம் பத்தாயிரம் என அபதார தொகையை அறிவித்து வந்தார்.

மேலும் தொடர்ந்து கலெக்டர் கதிரவன் தனது ஆய்வு பணியை செய்துவருவது ஈரோடு மக்களிடம் இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

தாளவாடியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை ; வாழை மரங்கள் சேதம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தாளவாடி மலைப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக் காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

இந்தத் திடீர் சூறைக்காற்றால் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்தது. அப்போது தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்டகாஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது. சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் விவசாயி தீபு (35) என்பவரின் 700 நேந்திரம் வாழை, சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழை, ராசு என்பவரின் 1000 வாழை, தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின்  1000 வாழை என 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு சென்ற நெடுஞ்சாலைத் துறை மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.

மேலும், ராமாபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது. அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலைப்பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். ஒருபுறம் மழை வந்ததால் சந்தோசம் இருந்த போதும், சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் கடந்த இரண்டு நாட்களாக மட்டும் ரூ. 20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.