Skip to main content

நெடுவாசலில் லட்சம் வௌவால்கள் வாழ்ந்த மரங்கள் மொட்டையானது!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018

நெடுவாசல் வடக்கு கிராமத்தில் வெள்ளையப்பன் கோயில் காட்டில் நின்ற ஆலமரங்களில் ஒரு லட்சம் வௌவால்கள் இருந்தது. ஆனால் கஜா புயலுக்கு பிறகு மரங்கள் உடைந்து நாசமானதால் சில ஆயிரம் வௌவால்களே மொட்டை மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

 

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் வடக்கு கிராமத்தில் அப்பகுதி மக்களின் வழிபாட்டு தளமாக உள்ள வெள்ளையப்பன் கோயில் காட்டில் பல ஆலமரங்கள் விழுதுபரப்பி பல ஏக்கர் பரபரப்பளவில் நிற்கிறது. 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கு கிடா வெட்டி பூஜை போட்டு விருந்து படையல் நடத்துவது வழக்கம். அப்போதுகூட அங்கு ஆலமரங்களில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவால்களுக்கு சிக்கல் வந்துவிடாமல் கவனமாக பார்த்துக் கொண்டார்கள் கிராமத்து மக்கள். யாரும் அந்தப் பக்கம் வௌவால்களை வேட்டையாடி சென்றுவிடக் கூடாது என்பதற்காக அந்தப் பகுதி இளைஞர்கள் கண்காணித்தும் வந்தனர். இதனால் வெடிகள் கூட  வெடிப்பத்தில்லை அந்த பகுதியில்.

 

bats

 

இந்த நிலையில் கஜா புயல் தாக்கிய வேகத்தில் வெள்ளையப்பன் கோயில் காட்டையும் புரட்டிப் போட்டது. ஆலமரம், அரசமரங்களின் கிளைகள் உடைந்து நாசமானது. பல்வேறு இடங்களுக்கும் இறைதேடிச் சென்ற வௌவால்கள் வந்து அடையும் அதிகாலை நேரத்தில் பலமான காற்று வீசியதால் காற்றின் வேகம் தாங்காமல் பல ஆயிரம் வௌவால்கள் இறந்தும் பறந்தும் போனது. எஞ்சிய கொஞம் வௌவால்கள் மட்டுமே மொட்டையாய் நிற்கும் நிழல் இல்லாத மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது. 

 

bats

 

அந்த வழியாக வந்த செல்லக்கண்ணு என்ற மூதாட்டி கூறும் போது.. இந்த வெள்ளையப்பன் கோயில் எல்லைக்குள்ள யாரும் வேட்டையாட முடியாது. அதனாலதான் லட்சம் லட்சமா வௌவால்கள் வளர்ந்தது. இரவில் இறைதேடி போகும் வௌவால்கள் அதிகாலை 3 மணி முதல் வரத் தொடங்கும். அந்த சத்தம் கேட்டுதான் நாங்க விவசாய வேலைக்கு கிளம்புவோம். புயல் வந்த அன்றும் அப்படித்தான் இறைதேடிச் சென்ற வௌவால்களின் சத்தம் எங்களுக்கு கேட்காமலே போய்விட்டது. விடிந்து பார்த்தால் ஒட்டு மொத்த மரமும் உடைஞ்சு தொங்குது. அதுல கொஞ்சம் வௌவால்கள் தொங்குது. இந்த வௌவால்களும் இறை கிடைக்காமல் தவிக்கிது. இதுக்கு முன்னால வாழை, பலா, கொய்யா என்று பல பழங்களும் கிடைத்தது. இப்ப ஒட்டு மொத்த மரங்களும் அழிஞ்சதால வவ்வால்களுக்கு இறை கிடைக்கல என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'தொந்தரவு இல்லாமல் இருந்தவர்களை வெட்டி சாய்த்துள்ளனர்' - வைரலாகும் கண்ணீர் அஞ்சலி போஸ்டர்

Published on 12/12/2023 | Edited on 12/12/2023
nn

ராமநாதபுரத்தில் சாலையோரத்தில் இருந்த மரங்களை வெட்டியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமைப்படை அமைப்பினர் பல்வேறு இடங்களில் மரங்களுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டர்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சக மரங்கள் வெட்டப்பட்ட மரங்களுக்காக பேசுவது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ள அந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில், 'காற்றில் உள்ள நச்சுகளை நீக்கி சுவாசிக்க பிராணவாயு கொடுக்கும் உயிருள்ள எங்களை சமூக விரோதிகள் எக்காரணமுமின்றி வெட்டி சாய்க்கிறார்கள்.

26/11/2023 ஆம் தேதி பாரதி நகர் ஹோட்டல் பீமாஸ் நளபாகம் எதிரே யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலையோரம் இருந்த எங்களின் சகோதரரை வெட்டி சாய்த்துள்ளார்கள். மரங்களை வெட்டக்கூடாது என நீதிமன்ற தடை ஆணையை மீறி மரங்களை வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லையா? மனிதர்களை வாழவைக்கும் எங்களை வாழ விடுங்கள். கண்ணீருடன் மரங்களும் செய்யது அம்மாள் பசுமை படையும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.