Skip to main content

கண்மாய்ப் பாசனத்தைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள்! -மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! 

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

மதுரை மாவட்டம்-  களிமங்களத்தை சேர்ந்த முகமது அப்துல் காதர் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில்-‘மதுரை அருகிலுள்ள குன்னத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்மாய்க்கு தண்ணீர் வரத்தானது பெரியார் மற்றும் வைகை ஆற்று பாசனத்திலிருந்து வருகிறது. 


இந்தக் கண்மாயிலிருந்து வரும் நீர் குன்னத்தூர், களிமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களின்  விவசாய நிலங்களுக்குப் பயன்படுகிறது. கண்மாயின் மூலம் வரும் வருவாயை இரண்டு பஞ்சாயத்துகளும் சமமாகப்  பிரித்துக்கொள்ள வேண்டும் என, கடந்த 1986- ஆம் ஆண்டு நடந்த கிராம கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

lake clean madurai high court branch


இது தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.ஆனால்,  மனுவை அதிகாரிகள் நிலுவையில் வைத்தனர்.மேலும்,  கண்மாயின் வருவாயை குன்னத்தூர் கிராமம் மட்டும் முழுமையாக பெற்றுக்கொள்கிறது. இதனால் களிமங்களம் கிராமத்திற்கு வருவாய் இழப்பீடு ஏற்படுகிறது. எனவே, குன்னத்தூர் கண்மாயை இரண்டாகப் பிரித்து களிமங்களம் மற்றும் குன்னத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட விவசாய நிலங்களில், தனித்தனி பாசனத்திற்கு உபயோகப்படுத்திட வழிவகை செய்ய வேண்டும் என கடந்த ஆகஸ்ட் 27- ஆம் தேதி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.


ஆகவே, குன்னத்தூர் கண்மாயை இரண்டாகப் பிரித்து களிமங்களம் கிராமத்திற்கு விவசாயப் பாசனத்திற்கும், கண்மாயில் இருந்து வரும் வருவாயை பெறுவதற்கும்  அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.’என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனு நேற்று நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கண்மாயை இரண்டாகப் பிரிப்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 9- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.