திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியம் மேல் தணியாலம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஏரியினை பக்கத்து ஊரான காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிராம மக்கள் சார்பாக கோரிக்கை வைத்தோம். அந்த கோரிக்கையை ஏற்று நேற்று (16/09/2019) ஏரியினை RI மற்றும் REVENUE DEPARTMENT- யை சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் அளவீடு செய்தார்கள்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837429466-0'); });
அந்த அளவீட்டில் ஏரியின் பரப்பளவு சுமார் 20 ஹெக்டேர் நிலப்பரப்பளவு, அதாவது 68 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இவ்வளவு பெரிய ஏரியினை சுமார் 30 ஏக்கர் அளவில், அதாவது 44.1% சதவீதம் அளவுக்கு பாதி ஏரியை முழுவதும் ஆக்கரமிப்பு செய்துள்ளனர். இந்த ஏரியினை மீட்டெடுக்க கிராம மக்கள் சார்பாக HITACH மற்றும் JCB இயந்திரம் மூலம் தங்களது சொந்த செலவில், தற்பொழுது ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியினை கரையை மடித்தல் மற்றும் தூர்வாறுதல் போன்ற செயல்கள் தற்போது கிராம மக்கள் சார்பாக செய்யப்படுகிறது. பொதுமக்களின் பணிகளால் அங்குள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த ஏரி மூலம் சுமார் 450 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.