Skip to main content

ஏரியில் குளிக்கச் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

lake bath incident at kallakurichi


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ளது ரங்கப்பனூர். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 50 வயது காமராஜ். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் 42 வயது அர்ச்சனா. இருவரும் நண்பர்கள்.

 

கடந்த 25ஆம் தேதி மாலை அவர்கள் இருவரும் கிராமத்தில் உள்ள ஏரியில் குளித்து விட்டு வருவதற்காக, தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டுச் சென்றுள்ளனர். குளிக்கச் சென்ற அவர்கள் மீண்டும் வீட்டுக்குத் திரும்பவில்லை. இதனால், அவர்களது குடும்பத்தினர் குளிக்கச் சென்ற ஏரி பகுதிக்குச் சென்று தேடிப்பார்த்தனர். இருவரும் கிடைக்கவில்லை. இருவரும் நடுத்தர வயது மனிதர்கள். இப்படிப்பட்டவர்கள் ஏரியில் குளிக்கும்போது மூழ்கி இறந்திருக்க வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையுடன், பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். இருப்பினும், இருவர் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

 

இந்நிலையில், வடபொன்பரப்பி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார், சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் ஆகியோர் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர். காமராஜ் அர்ஜுனன் இருவரும் குளிக்கச் சென்ற அந்த ஏரியில் இறங்கி, பொதுமக்கள் உதவியுடன் தீவிரமாகத் தேடினர். இரவு முழுதும் தேடிய நிலையில், நேற்று மாலை இருவரையும் ஏரிக்குள் இருந்து சடலமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். இதையடுத்து அவர்களது உடல்களைப் பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமணைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீரில் மூழ்கி இறந்துபோன இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்குத் திருமணமாகி குழந்தைகள் மனைவி உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இருவரையும் இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர் கதறியழுதனர். ஊர் மக்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் தினசரி சம்பவங்களாக நடைபெற்று வருகின்றன.

 

எனவே, "பொதுமக்கள் அவரவர் ஊரில் பகுதிகளில் உள்ள ஆறுகள் ஏரிகள் குளங்களில் குளிப்பதற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் ஊராட்சி சார்பாக, பொதுக் குழாய்கள் பம்பு செட்டுகள் உள்ளன. இவற்றில் சென்று குளிக்க வேண்டும், என்பதைப் பற்றி கிராம மக்களுக்கு அரசு சார்ந்த துறையில் உள்ளவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்" என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.