Skip to main content

 பெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு! சிக்கவைத்த வீடியோ!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018
l

 

திருச்சி மாவட்ட எஸ்.பியிடம் அழுகையும் கண்ணீருமாய் வந்த அந்த பெண் அழுதுகொண்டே கம்மியான குரலில் சார்.. என்னுடைய ஸ்டேஷனில் வேலை பார்க்கும் எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் இரவு பணியின் போது என்னை கெடுக்க முயற்சி பண்ணி மானபங்கபடுத்தி விட்டார் சார். எனக்கு பயங்கர மன உளைச்சலா இருக்கு சார் என்று அழுது புகார் கொடுத்திருக்கிறார். 

 

போலிஸ் எஸ்.ஐ. மீது  பெண் போலீஸ் இப்படி அதிரடியாக புகார் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த எஸ்.பி உடனே அந்த பாலியல் தொல்லை  செய்த அந்த எஸ்.ஐ.யை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார். 

 

பெண் போலிசை மானபங்க முயற்சி செய்தற்காக சஸ்பெண்ட செய்யப்பட்டதை அறிந்த எஸ்.ஐ. அதிர்ச்சியடைந்து, என்னங்க இது புதுகதையாக இருக்கு. நான் எங்கே பாலியல் தொந்தரவு   பண்ணினேன். நாங்கள் இருவரும் எப்போதும் இப்படி தானே இருப்போம். என் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுத்தால் இரண்டு பேர் மீதும் எடுங்கள் என்று புகார் கொடுக்க, பிரச்சனை தற்போது யூடர்ன் எடுக்க ஆரம்பித்தது. 

இப்போது மாவட்ட எஸ்.பி ஜீயபுரம் டி.எஸ்.பி. ராதகிருஷ்ணன் தலைமையில் மறுவிசாரணைக்கு உத்தரவிட அவருடைய விசாரணையில் பிரச்சனையே வேறு மாதிரியாக தெரியவும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

 

டி.எஸ்.பி. விசாரணையில்.. 

எனக்கும் மட்டும் தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்குது என ஆதங்கப்பட்டார். இதையடுத்து, சுதாரித்து கொண்ட மாவட்ட எஸ்.பி காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய டி.எஸ்.பி ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று பாலசுப்பிரமணி இரவு 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்து உள்ளார். அப்போது சசிகலா போலீஸ் பணியில் இருந்தார். சில நொடிகளில் அந்த சசிகலா அருகில் செல்லும் அந்த எஸ்.ஐ, அவருக்கு ஒரு முறை முத்தம் கொடுத்துவிட்டு, அவரிடம் பேச்சு கொடுக்கிறார். 

 

சில நொடிகளில் காமத்தின் உச்சத்திற்கே செல்லும் அவர், அந்த பெண் போலீசின் முகத்தை பிடித்து இழுத்து ‘லிப் டூ லிப்’ அடிக்கிறார். 2 நிமிடம் 50 நொடிகள் ஓடும் வீடியோவில் அந்த பெண் போலீஸ் கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு மனதோடு அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தெரியவந்தது. 

 

முன்னதாக இருவரின் காம சேட்டையின் போது, காவல் நிலைய வளாகத்திற்குள் பைக்கில் உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் வருகிறார். அதில், அடிக்கும் லைட் வெளிச்சத்தை பார்த்து இருவரும் ஒதுங்கி இருப்பதும், எஸ்.ஐ வெளியே சென்றதும் உளவுத்துறை போலீஸ்காரரிடம் அந்த பெண் போலீஸ் பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

 

தனக்கு தானே குழிபறித்த சசிகலா

இருவரின் காம சேட்டை விவரத்தை உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளியே சென்றவுடன், சசிகலா கணிப்பொறி பிரிவில் வேலை செய்வதால் வீடியோவில் பதிவான காட்சிகளை தனியாக அவர் பதிவு செய்து கொண்டார். உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் எஸ்.ஐ தினமும் எனக்கு கொடுக்கும் பாலியல் தொந்தரவை ஆதாரத்துடன் நிரூபிக்கத்தான், அந்த உளவுத்துறை போலீஸ்காரரை நான் வரவழைத்தேன் என்று அந்த பெண் போலீஸ் கூறியதாக கூறப்படுகிறது. இருப்பினும், வீடியோவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது இருவரின் சம்மதத்துடன் காமசேட்டை அரங்கேறியதாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. 

அந்த எஸ்.ஐக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகளும், கணிப்பொறியில் வேலை பார்க்கும் சசிகலாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்