Skip to main content

வேதாரண்யம் கலவரத்திற்கு போலிஸ் பற்றாக்குறையும் ஒரு காரணம்; வேதனையில் சமூக ஆர்வலர்கள்!

Published on 25/08/2019 | Edited on 26/08/2019

 

இருவேறு சமூகத்தில் சிலருக்கிடையே ஏற்பட்ட மோதலால் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. அமைதி திரும்ப அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன், நாகை எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பல்வேறு கட்சியின் முக்கியஸ்தர்களை அழைத்து பேசிவருகின்றனர்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வேதாரண்யம் எம்எல்ஏ அலுவலகத்தில் முகாமிட்டு அதிகாரிகள் மூலம் அமைதி திரும்ப என்ன செய்யமுடியுமோ அதை செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.

 

 The lack of police is one reason for the riots; Social activists in agony!

 

சம்பவம் அறிந்து அதிரந்துபோன மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் நாகை எம்.எல்.ஏவுமான  தமிமுன் அன்சாரி அக் கட்சி நிர்வாகிகளோடு வேதாரண்யம் விரைந்து வந்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியனை சந்தித்து, நிலைமைகளை கேட்டறிந்ததோடு பதட்டத்தை குறைக்க என்ன வழி என பேசிவருகிறார். 

நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார், மத்திய மண்டல ஐஜி வரதராஜிலு உள்ளிட்டவர்களும் அமைச்சர் ஒ.எஸ்.மணியனோடு வேதாரண்யம் வந்து முகாமிட்டு தடை உத்தரவு பிரப்பித்து ஒவ்வொரு சாலைகளின் முகப்பிலும் காவல்துறையை குவித்துள்ளனர்.

அதுபோல் வேதாரண்யத்தை சேர்ந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள், பல்வேறு சமூக பிரமுகர்களை தொடர்புக்கொண்டு அனைவரது ஒத்துழைப்பு இருந்தால்தான் அமைதிநிலைக்கு கொண்டுவரமுடியும் என கூறி அழைப்பு விடுத்துள்ளனர். அதேபோல வேதாரண்யம் வட்டாரத்தில் டாஸ்மார்க் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், " இரு சமுக இயக்கங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலானது அம்பேத்கார் சிலை உடைப்பில் முடிந்ததுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. காவல் அதிவிரைவுப் படை குவிக்கப்பட்டு இருப்பதால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்." என கூறியுள்ளார்.

இது குறித்து வேதாரண்யம் வர்த்தகர் ஒருவர் நம்மிடம், " இந்த கலவரத்திற்கு சாதி ஒரு காரணமானாலும் காவல்துறையின் அலட்சியமும் முக்கிய காரணம், தமிழகத்தில் தீவிரவாதிகள் புகுந்துவிட்டதாகவும், வேளாங்கண்ணி கோயில் திருவிழாவிற்காகவும் போலிஸார் முழுவதும் அங்கு பணிக்கு அனுப்பபட்டுவிட்டனர்.

பதட்டமான தொகுதியான வேதாரண்யம் காவல்நிலையத்தில் வெறும் மூன்று போலீசாரே இருந்துள்ளனர். அவர்களால் சிலையை உடைப்பதை பார்க்க முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை, ஒருமணி நேரம் எந்த தொந்தரவும் இல்லாமல் கலவரம் செய்தனர். பெண் காவலர்கள் சிலை உடைப்பதை படம் பிடித்தபோது சிலை உடைப்பில் கலவரக்கார இளைஞர்கள் துணிகளை தூக்கி ஆபாசமாக பேசி இதையும் படம் பிடிங்க என்று கூறும் நிலமைதான் இருந்தது, பாண்டியனின் கார் கொளுத்தப்பட்டால், கொளுத்தியர்களை  எதுவும் செய்யலாம் அது தான் நியாயம் அதைவிட்டுவிட்டு சிலையை உடைத்து கலவரம் தூண்டி ஆதாயம் அடைவது என்ன நியாயம்." என்கிறார் சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சி விலகாமல்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.