Skip to main content

முறையற்ற தொடர்பை கைவிட மறுத்த மனைவியை கல்லால் தாக்கி கொன்ற கூலித்தொழிலாளி

Published on 11/06/2023 | Edited on 11/06/2023

 

 A laborer who stoned his wife to after she refused to give up illicit relations

 

சேந்தமங்கலம் அருகே, முறையற்ற தொடர்பை கைவிடும்படி பலமுறை எச்சரித்தும், மறுப்பு தெரிவித்த மனைவியை கூலித்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி தேவேந்திர தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (61). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவியும், மகளும் இருந்த நிலையில் கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து விட்டார்.   இதையடுத்து சின்னப்பொண்ணு (44) என்பவரை மாரியப்பன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர்.

 

இந்தநிலையில் சின்னப்பொண்ணுவுக்கும், உள்ளூரைச் சேர்ந்த ஒரு  இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, முறையற்ற தொடர்பாக மாறியது. மாரியப்பன் கூலி வேலைக்குச் சென்ற பிறகு, சின்னப்பொண்ணுவும், அவருடைய ரகசிய காதலனும் தனியாக சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இதையறிந்த மாரியப்பன் மனைவியையும், அவருடைய காதலனையும் கண்டித்துள்ளார். ஆனாலும் அவர்களின் சந்திப்பு தொடர்ந்து வந்தது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

 

ஜூன் 8ம் தேதி இரவு, சின்னப்பொண்ணு தன்னுடைய ரகசிய காதலனின் வீட்டிற்குச் சென்றுவிட்டு நீண்ட நேரம் கழித்து வீட்டுக்குத் திரும்பியுள்ளார். இதைத் தெரிந்து கொண்ட மாரியப்பன் அவரை கண்டித்துள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மாரியப்பன் ஆத்திரத்தில் சின்னப்பொண்ணுவை சரமாரியாக தாக்கினார். நிலைகுலைந்து கீழே சரிந்து விழுந்த பிறகும் ஆத்திரம் குறையாத மாரியப்பன், வீட்டிற்கு வெளியே இருந்த கல்லை எடுத்து வந்து மனைவியின் தலையில் போட்டுள்ளார். அதே கல்லை எடுத்து மீண்டும் மீண்டும் தாக்கியுள்ளார். இதில் சின்னப்பொண்ணு நிகழ்விடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

 

இதையடுத்து மாரியப்பன் பேளுக்குறிச்சி காவல்நிலையத்திற்குச் சென்று, தான் மனைவியை கல்லால் அடித்துக் கொலை செய்துவிட்டதாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார். அதன் பேரில், காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் மற்றும் காவலர்கள் நிகழ்விடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இயைடுத்து மாரியப்பனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.