Skip to main content

தொழிலாளர் தினத்தில்.. உயிரை கொடுத்து 10 தொழிலாளிகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!!

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

மே முதல் நாள்... உழைப்பாளர்கள் தினம்.. தொழிலாளர் தினம்.. இந்த தினத்திலும் வேலைக்கு போனால்தான் வறுமையை விரட்ட முடியும் என்ற நிலையில் தான் உடல் உழைப்பாளர்கள் உள்ளனர்.

  

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பகுதியில் உள்ள மக்கள் விவசாய வேலைகளுக்காக பல கிராமங்களுக்கும் சென்று வருகிறார்கள். இவர்கள் மொத்தமாக வயல் வேலைகளுக்கு  செல்ல குட்டியானைகளில் சென்று வருகின்றனர். வயல் வேலைகள் முடிந்து கால்நடைகளுக்கு புல் அருத்து  கொண்டு மாலையில் அதே  குட்டியானைகளில் புல் கட்டுகளையும் ஏற்றிக் கொண்டு வீடு வந்து சேருவார்கள்.

 

.The driver who saved 10 lives loss his life

 

இப்படித்தான் இன்று மே தினத்திலும் பெண் விவசாய தொழிலாளர்கள் கீரமங்கலம் மேற்கு பகுதியில் இருந்து அன்பழகன் என்பவரின் வாகனத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் ஏறி கீரமங்கலம் வடக்கு பகுதி வயலுக்கு வேலைக்குச் சென்றனர். வாகனம் அம்புலி ஆற்றுப்பாலத்தை நெருங்கும் போது வாகனத்தை ஓட்டிய அன்பழகனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் வாகனம் நிலைதடுமாறியது. ஒரு கையில் நெஞ்சையும் மறு கையில் ஸ்டியரிங்கையும் பிடித்துக் கொண்டவர் வாகனத்தை ஓரங்கட்டமுடியாமல் திணறிய நிலையில் பாலத்தில் மோதினால் வாகனத்தில் இருக்கும் பெண்களுக்கு ஆபத்து என்பதை உணர்ந்தவர் நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு இருக்கையில் சாய்ந்தார். சாய்ந்தவரை பெண்கள் தண்ணீர் தெளித்து எழுப்பியும் பயனில்லை.. அந்த வழியாக சென்ற மற்ற ஓட்டுநர்கள் அதே வாகனத்தில் ஏற்றி கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர். ஆனால் அதற்குள் அன்பழகன் உயிர் பிரிந்திருந்தது.

   

இதைப்பார்த்து கதறிய பெண்கள் தொழிலாளர் தினத்தில் எங்கள் 10 பேரின் உயிரை காப்பாற்றி தன் உயிரை கொடுத்திருக்கிறார் என்று கதறினார்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவலர்கள் தாக்குதலால் டிரைவர் மரணம்? மக்களின் போராட்டத்தால் தென்காசியில் பதற்றம்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi
வேன் டிரைவர் முருகன்

தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகேயுள்ள வடக்குபுதூரைச் சேர்ந்த வேன்டிரைவர் முருகன் கடந்த மார்ச் 8 அன்று (மஹாசிவராத்திரி) அச்சம்பட்டியிலிருந்து பொது மக்களை வேனில் ஏற்றிக் கொண்டு பஞ்சஸ்தலங்கள் செல்வதற்காக சங்கரன்கோவில் டவுண் பஜார் வழியாக வந்திருக்கிறார். அதுசமயம் எதிர்பாராத விதமாக வேன் முன்னே சென்ற ஆட்டோ ஒன்றில் மோதியதால், வேன்டிரைவர் முருகனும் ஆட்டோ ஓட்டுனரும் தர்க்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் மெயின் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நகர முடியாமல் நீண்ட தொலைவிற்கு ப்ளாக் ஆகியது போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சம்பவ இடம் வந்தவர்கள் முருகனை தாக்கியுள்ளதாகத் தெரிகிறது. இதனால் மயக்கமடைந்த முருகனை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இதையறிந்த முருகனின் உறவினர்கள் சங்கரன்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இரவு முழுக்க சாலை மறியலில் ஈடுபட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

போலீசார் தாக்கியதால்தான் முருகன் இறந்ததாகக் கூறி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட அவரது உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்திவருகின்றனர். சம்பவத்திற்கு காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முருகனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும். அது வரை உடலை வாங்கப் போவதில்லை என்று கூறி அவரது உறவினர்கள் வடக்குபுதூர் கிராமத்தில் 6வது நாளாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். உடன் மார்க்சிஸ்ட் கட்சியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அறிவிக்கப்பட்டதன்படி மார்ச் 13 அன்று சங்கரன்கோவில் நகரின் தேரடித் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற வகையில் காலை 10.30 மணியளவில் நகரைச் சுற்றியுள்ள வடக்குபுதூர், காந்திநகர், அச்சம்பட்டி, புளியம்பட்டி நெடுங்குளம், அழகாபுரி, சீவலராயநேந்தல், அழகுநாச்சியார்புரம், அழகநேரி என 32 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பங்கேற்றனர். அதுசமயம் ஒரு பகுதியினர் நகரின் முக்கியத் தடுப்புகள், தடைகளைப் போட்டு வாகனங்களைத் தடுத்தும் மறியலில் ஈடுபட்டனர். பதற்றம் காரணமாக பாதுகாப்பு பணிக்கென்று போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் நகரம் இறுக்கமானது. இதனிடையே சங்கரன்கோவில் அருகேயுள்ள மருதப்பபுரம் கிராமத்தில் எதிர்பாராத வகையில் வைக்கோல் படப்பு தீப்பிடித்து எரிந்ததால் அதனை அணைக்கிற வகையில் அந்த வழியாக வந்த சங்கரன்கோவிலின் தீயணைப்பு நிலைய வாகனத்தை நகருக்குள் விடாமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்க தீயணைப்பு வாகனம் வேறு வழியாகச் சென்றது.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

நேரம் செல்லச் செல்ல வேறு சில பகுதிகளிலிருந்தெல்லாம் மக்கள் பிரதானச் சாலையை நோக்கி திரண்டு வர அது சமயம் அந்தப் பகுதியிலிருந்த கடைகளை அடைக்கச் சொல்லி கற்களை வீசவே, பதற்றமடைந்த வியாபாரிகள் பீதியில் கடைகளை அடைத்தனர்.  ஆபத்தான நிலையை அறிந்த தென்காசி மாவட்ட எஸ்.பி.யான சுரேஷ்குமார் மறியல் நடந்த பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வந்தவர் அவர்களை சமாதானப் படுத்தியிருக்கிறார். ஆனாலும் ஒரு பகுதியினர் அவரைச் சூழ்ந்து கொண்டவர்கள் அரைமணி நேரத்திற்கும் மேலாக அங்கிருந்து செல்ல விடாமல் முற்றுகையிட்டனர்.

struggle of people claiming that driver was incident by policemen in Tenkasi

தொடர்ந்து அவர்களிடம் பேசிய எஸ்.பி, முருகன் இறந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதாக கூறியவர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். மறியல், ஆர்ப்பாட்டம் என நகரம் துண்டிக்கப்பட, சுற்றுப்பட்டுக் கிராமங்களிலோ, பதற்றமும் பரபரப்பும் இறங்கியபாடில்லை.

Next Story

அரசுப் பேருந்தை வழிமறித்து ஓட்டுநர், நடத்துநர் மீது தீடீர் தாக்குதல்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
beaten on driver and conductor who blocked the government bus in Trichy

திருச்சி பேட்டைவாய்த்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் சக்திவேல் (55). இவர் அரசுப்பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் சனிக்கிழமை, ராம்ஜி நகரில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் அரசு நகரப்பேருந்தில் பணியிலிருந்தார். அவருடன் குளித்தலையை சேர்ந்த நடத்துனர் முருகானந்தமும் (32) பணியிலிருந்தார். பேருந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வழியாக சென்ற போது, அதே வழியில் ஆட்டோவில் சென்ற 4 பேர், பேருந்தை மறித்து, அவர்களை முந்திச்செல்ல வழிவிடாமல் பேருந்தை இயக்கியதாக கூறி தகராற்றில் ஈடுபட்டனர். 

வாக்குவாதம் முற்றியதில் ஓட்டுநர் சக்திவேலையும் தடுக்க முயன்ற நடத்துநர் முருகானந்தத்தையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் பேருந்து சாலையில் நிறுத்தப்பட்டதையடுத்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து சக ஓட்டுநர்களுடன் சக்திவேல் கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை தாக்கிய அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (36), சசிக்குமார் (32) இருவரை  கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.