தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக கடந்த 11ஆம் தேதி வரை பெரும் மழை பெய்தது. இதனால், சென்னையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிபல்வேறு குடியிருப்புகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால், பல பகுதிகளில் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். திமுக, அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தி.நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.