ADVERTISEMENT
ADVERTISEMENT
சென்னையில் உள்ள ஃபிலிம்சேம்பரில் அக்டோபர் 8ஆம் தேதி அன்று தமிழ் சினிமா துறையினரை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தமிழ் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்கின்றனர்.
இந்த ஆலோசனையில் தமிழ் திரைத்துறையினர், ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சருடன் பேசவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணையமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முறையாக எல். முருகன் ஆலோசனை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT
Show comments