Skip to main content

இனிமேல் விஜயகுமார்..அறிவிக்கப்படாத மாநில முதல்வருங்கோ..!

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சிறப்பு ஆலோசகராக ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான விஜயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் உள்ள ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அதிகாரியாக செயல்படுவார் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 kvijay kumar ips appointed as advisor to amit shah



தற்போது ஜம்மு காஷ்மீரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது. குடியரசுத் தலைவர் ஆட்சி என்றாலே அதன் நிர்வாகம் உள்துறை அமைச்சகத்திடம் வந்துவிடும். அப்படியெனில் மத்தியில் உள்துறை அமைச்சராக இருப்பவர்தான், அந்த மாநிலத்தின் ஆட்சி, நிர்வாகத்தை நடத்துபவராக இருப்பார்.

ஆனால் சமீபத்தில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியது போன்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் இல்லை. அங்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளது. எல்லை பாதுகாப்புபடை, பிரிவினைவாத குழுக்கள், இந்தியாவின் எல்லை நிலையில் நடக்கும் போர்  என பல பிரச்சனைகள் உள்ளது.

அதையும் தாண்டி மக்களுக்கான நலத்திட்டங்கள் அங்கு உருவாகும் பல புதிய பிரச்சனைகள், தேவையான அடிப்படை வசதிகள், மக்களுக்கான அத்தியாவசிய தேவைகள் இப்படி மேலும் ஏற்படும்  சட்டம் ஒழுங்கு பிரச்சனை, திடீரென ஏற்படுகிற பயங்கரவாதப் பிரச்சனை என எல்லாவற்றையும் சமாளித்துக் கொண்டு அங்குள்ள அரசியல் நகர்வுகளையும் கண்கானிப்பதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த ஒட்டுமொத்த பொறுப்பும் ஜம்மு காஷ்மீரை வழிநடத்தும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உள்ளது. இந்தப் பின்னணியில்தான் உள்துறை அமைச்சரான அமித்ஷாவுக்கு ஆலோசகராக விஜயகுமார் நியமிக்கப்பட்டு அவரின் பொறுப்பு ஜம்மு காஷ்மீரை நிர்வகிப்பது என அறிவிக்கப்பட்டது. எனவே விஜயகுமார் ஜம்மு காஷ்மீரின் அறிவிக்கப்படாத ஒரு முதல்வராக, தனது ஆளுமைகளை செலுத்தப் போகிறார். 

மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக இருந்ததால் அவர் இந்த தேர்வில் வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குட்லிஸ்ட்டிலும் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

அமித்ஷாவின் சொத்து மதிப்பு?; வெளியான விவரம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
 Published details Amit Shah's net worth

நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி, நேற்று தொடங்கி ஜுன் 1ஆம் தேதி வரை நடைபெற்று அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கை ஜுன் 4ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. அதில், முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே,மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்தில் மே 7ஆம் தேதி அன்று நடைபெறவிருக்கிறது. குஜராத் மாநிலம், காந்தி நகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். அதன்படி, அமித்ஷா தனது வேட்பு மனுதாக்கல் செய்தார். அவர் செய்த வேட்புமனுவில் அவருடைய சொத்து மதிப்புடைய பிரமாண பத்திரமும் இணைக்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது. 

அமித்ஷாவின் பிரமாண பத்திரத்தில், அவருக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்புள்ள நகைகள் இருப்பதாகவும், சொந்தமாக கார் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமித்ஷாவின் ஆண்டு வருமானம் 2022 - 23 ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“இந்தித் திணிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது..” - ராமதாஸ் 

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

“Hindi imposition efforts will never win..” - Ramadoss

 

இந்திய மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் குறைவாக இருந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் இந்தியை ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். இதற்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய மக்கள் இந்தியை ஏற்றுக்கொள்ளும் வேகம் குறைவாக இருந்தாலும் கூட, என்றாவது ஒருநாள் ஒட்டுமொத்த இந்தியர்களும் எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் இந்தியை ஏற்றுக் கொண்டாகத்தான் வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து இந்தி மீதான அவரது நம்பிக்கையைக் காட்டவில்லை; மாறாக, இந்தித் திணிப்பின் மீதான நம்பிக்கையையே காட்டுகிறது. இந்தித் திணிப்பு முயற்சிகள் ஒருபோதும் வெல்லாது.

 

இந்தியை ஏற்றுக்கொள்ள தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்கள் ஏங்கவில்லை; அவை எப்போதும் எதிர்ப்பு நிலையில்தான் உள்ளன. அத்தகைய சூழலில் அனைவரும் இந்தியை எதிர்ப்பின்றி ஏற்கும் நிலை வரும் என்றால், அத்தகைய நிலையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிடுகிறது என்றுதான் பொருள். கடந்த காலங்களில் அத்தகைய முயற்சிகள் எப்படி வீழ்த்தப்பட்டனவோ, அதைப்போலவே இனிவரும் காலங்களிலும்  வீழ்த்தப்படும். இது உறுதி.

 

எந்த மொழியுடனும் இந்தி போட்டி போடவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறுவது உண்மையென்றால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகளுக்கு உரிய தகுதியை வழங்க மத்திய அரசு மறுப்பது ஏன்? மாநில மொழிகள் மத்திய அலுவல் மொழிகளாக்கப்பட்டால் இந்தி  வீழ்ந்து விடும் என்ற அச்சத்தால் தானே?

 

இந்தி மொழியின் செழுமை மீதும், வலிமை மீதும்  நம்பிக்கை இருந்தால், தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும்  மத்திய அரசின் அலுவல் மொழிகளாக அறிவிக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணை மொழிகள் அனைத்தையும் அலுவல் மொழிகளாக மத்திய அரசு அறிவிக்கட்டும். அவற்றில் எந்த மொழி சிறந்த மொழியோ, எது  இலக்கிய வளம் மிக்க மொழியோ, எது இலக்கணத்தில் சிறந்த மொழியோ, அது மக்கள் மனங்களை ஆளட்டும்” என்று தெரிவித்துள்ளார்.