Skip to main content

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர்... வியாபாரிகளின் கண்களிலோ கண்ணீர்!

Published on 09/11/2020 | Edited on 09/11/2020

 

kutralam

 

தென்மேற்குப் பருவ மழை காலாவதியாகி தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. வாராத கொடையாய் வந்த தென்மேற்குப் பருவக்காற்று நெல்லை தென்காசி மாவட்டப் பகுதியை ஒட்டிய தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் புறமுள்ள கேரளாவில் பருவமழையாய்க் கொட்டிய போது, அந்த நேரத் தமிழகக் கோடையான மே தொடங்கி ஆகஸ்ட் வரையில் தென்காசி மாவட்டத்தின் குற்றாலப் பகுதிகளின் சீசனாய் பெய்ததால் மெயினருவி ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் வெள்ள நீர் அருவியாய்க் கொட்டியது.

ரம்மியமான அந்த நான்கு மாதங்களிலும் குற்றாலத்தை நம்பியுள்ள லாட்ஜ்கள், ஹோட்டல்கள், தனியார் ரிசார்ட்கள், மெயின் வீதி கடைகளின் வியாபாரம், வருகிற சுற்றுலாப் பயணிகளால் முற்றுகைக்கு உட்படும். வியாபாரம் களைகட்டும் அதனை நம்பியுள்ள மேற்கண்ட அனைத்து வியாபார மக்களும் பயனடைவர். காலம் காலமாகக் குற்றால அருவிகளின் வழியாய் வியாபாரத்தை நம்பியுள்ள இந்தப் பாமர மக்களின் பிழைப்பை, வாழ்வாதாரத்தை இந்த வருட கரோனா எனும் மாயாவி பதம் பார்த்துவிட்டது. மூன்று மாத இடைவெளிக்குப் பின்பு தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கிவிட்டது. அதன் விளைவாய், கடந்த இரண்டு நாட்களாகப் பெய்த தொடர் மழை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்த்தன. விளைவு குற்றால அருவிகள் அனைத்திலும் வெள்ளம் அருவியாய்க் கொட்டுகிறது.

 

kutralam falls


கரோனாத் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் கரோனா தொற்று தடுப்பின் பொருட்டு அரசு லாக்டவுண் அறிவித்து எட்டாவது மாதமாகத் தொடர்வதால் குற்றாலத்தின் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், மக்கள் குளிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுத் தொடர்ந்த வண்ணமிருக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கான தடை காரணமாக, லாட்ஜ்கள், அரசுப் பேருந்துகளின் போக்குவரத்து கார் பார்க்கிங், மஸாஜ் தொழில், தங்கும் விடுதிகள் சாலையோரக் கடைகள் மூடப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகளின் வரத்தின்மையால் சீசன் வியாபாரம் படுத்துவிட்டது.
 

cnc

 

இந்த வருட எங்களின் வியாபார வருமானம் வாழ்வாதாரம் அனைத்தையும் கரோனா காவு கொண்டுவிட்டது. 4 மாத சீசன் வியாபாரம் 30 கோடிக்கும் மேல் இழப்பு. வெளியே சொல்ல முடியாத கஷ்டம் கண்ணீரைத் தவிர எங்களிடம் வேறில்லை என வேதனையைக் கொட்டுகின்றனர் பெயர் சொல்ல விரும்பாத வியாபார மக்கள்.

குற்றாலத்தில் அருவியைக் காணலாம். ஆனால் குளிக்க அனுமதியில்லை. வரும் சீசனின் ஐயப்ப பக்தர்களின் வருகையுமிருக்காது என்கின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீரோடையில் மிதந்த சடலம்; போலீசார் விசாரணையில் அதிர்ச்சி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
A body lying in a stream; Police investigation shocked

தந்தையைக் கொலை செய்தவரைப் பழிக்குப் பழி கொலை செய்து நீரோடையில் வீசிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் தெற்கு ஏறாந்தை கிராமத்தில் வசித்து வருபவர் தேவபாலன். லாரி ஓட்டி வந்த தேவபாலன் திடீரென காணாமல் போன நிலையில், உறவினர்கள் அவரைத் தேடி வந்தனர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள நீரோடை ஒன்றில் சடலம் ஒன்று மிதப்பதாகத் தகவல் பரவியது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திசையன்விளை போலீசார் ஆய்வு செய்ததில், வெட்டுக் காயங்களுடன் ஒருவர் கொலை செய்யப்பட்டு நீரோடையில் வீசப்பட்டது தெரிய வந்தது.

உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தியதில், அது காணாமல் போன தேவபாலன் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தேவபாலன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தூர் நீதிமன்றத்தில் உத்திரகுமார், சுரேஷ்குமார், சேர்மதுரை உள்ளிட்ட மூன்று பேர் சரணடைந்தனர். மூவரும் சகோதரர்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பழிக்குப் பழியாக லாரி டிரைவரை கொலை செய்தது தெரியவந்தது.

2017 ஆம் ஆண்டு துரைபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேவபாலனுக்கு தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபணம் ஆகாததால் அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துரைபாண்டியனின் மகன்களான சுரேஷ்குமார், உத்திர குமார், சேர்மதுரை ஆகிய மூன்று பேரும் பல வருடங்கள் கழித்து தேவபாலனை வெட்டிக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது.

Next Story

மது போதையில் ரகளை; தட்டிக் கேட்டவர் கொலை; சுட்டுப் பிடித்த போலீசார்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Intoxicated with alcohol; Police shot

சிறையில் இருந்து வந்த இளைஞர் மது போதையில் சாலை பணியாளரை அரிவாளால் வெட்டி கொன்றுவிட்டு காவலரையும் வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நெல்லை மாவட்டம் வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த பேச்சிதுரை என்ற நபர் வழக்கு ஒன்றில் சிக்கி கடந்த வாரம் பாளையங்கோட்டை சிறையில் இருந்து வெளிவந்த நிலையில், தன்னுடைய நண்பர் சந்துரு என்பவருடன் சேர்ந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மது போதையில் இருந்த இருவரும் சாலையில் காரை நிறுத்தி ரகளை செய்து கொண்டிருந்தனர். அந்த பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த சாலை பணியாளர் கருப்புசாமி என்பவர் இதனைத் தட்டிக் கேட்டுள்ளார்.

போதையில் ஆத்திரமடைந்த பேச்சிதுரை சாலைப் பணியாளர் கருப்பசாமியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார். அதன் பிறகு அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் முன் பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த தலைமைக் காவலர் செந்தில்குமார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அருகிலிருந்த வாழை தோப்புக்குள்  பேச்சிதுரை தலைமறைவானான்.

Intoxicated with alcohol; Police shot

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்த உடனடியாக காவல்துறையினர் பலர் அந்த பகுதியில் முகாமிட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையை அடுத்து வாழை மர தோப்பில் பதுங்கி இருந்த பேச்சிதுரையை போலீசார் சுட்டுப் பிடித்தனர். அதன் பிறகு அவனுடன் சேர்ந்து ரகளையில் ஈடுபட்ட சந்துருவையும் போலீசார் கைது செய்துள்ளனர். மதுபோதையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.