Skip to main content

அசுதோஷ் சுக்லாவிடம் விசாரித்த சி.பி.ஐ.!!! விரைவில் முடிகிறது குட்கா ஊழல் வழக்கு???

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

முன்னாள் சென்னை காவல் ஆணையர் அசுதோஷ் சுக்லாவிடம் கடந்த மே 8ம் தேதி விசாரணை நடந்துள்ளது.
 

asuthosh shukla



இவர் 2016ம் ஆண்டில் சென்னை காவல் ஆணையராக இருந்தவர், குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் பெற்றதாக மாதவராவின் டைரியில் இருந்தது. அதனடிப்படையிலேயே விசாரணை நடந்துள்ளது. ஏற்கனவே ஒருமுறை சம்மன் அனுப்பியபோது அவர் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஆஜரானார். 

குட்கா மீதான விசாரணை இறுதிகட்டத்தை அடைந்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட, அதில் தொடர்புடைய பலரையும் விசாரித்தது சிபிஐ. குட்கா தடைக்குபிறகு அதிகமாக விற்கப்பட்ட காலமான 2016ல் சென்னை காவல் கண்காணிப்பாளராக இருந்தவர் என்பதாலும், மாதவராவ்வின் டைரியில் பெயர் இருந்தது என்பதாலும்தான் இவரை சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர். இன்னும் சில மாதங்களில் சிபிஐ விசாரணை முடிந்துவிடும் என்று தெரிவித்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குட்கா விற்பனை; ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதல்

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
 Attack on officials who went to inspect

திண்டுக்கல்லில் உள்ள மிகப் பிரசித்திபெற்ற பழனி முருகன் கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பல்வேறு கடைகள், வர்த்தக நிறுவனங்கள் இயங்கி வரும் நிலையில், பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு கடந்த ஜனவரி 9 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 'முழுவதும் ஆக்கிரமிப்பு இல்லாத அளவிற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலங்களில் பழனி கோவிலை சுற்றியுள்ள இடங்களில் எவ்வித ஆக்கிரமிப்புகளையும் அனுமதிக்கக் கூடாது. பழனி கோவிலை சுற்றியுள்ள வீதிகள் இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்தக் கூடாது. அதேபோல் பிளாஸ்டிக் மற்றும் குட்கா விற்பனைக்கு முழுமையாக அங்கு தடை விதிக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வட மாநில தொழிலாளர்கள் குடியிருந்து வரும் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக விசாரிக்க போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர் சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது அந்த இடத்தில் தமிழக அரசு தமிழக அரசு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா ஆகியவை விற்பனை செய்யப்பட்டது தெரிந்தது. இது தொடர்பாக பொருட்களை பறிமுதல் செய்து கொண்டிருந்த பொழுது அங்கிருந்த வட மாநில இளைஞர்கள் மற்றும் மக்கள் ஆய்வுக்காக சென்ற அதிகாரிகளை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

குட்கா முறைகேடு வழக்கு; மத்திய அரசு முக்கிய அனுமதி

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

Malpractice case; The central government is the main decision, ex minister vijayabaskar

 

தமிழ்நாட்டில் புகையிலைப் பொருட்கள் விற்பனை, கிடங்குகளில் வைப்பது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்கப்படுவதாகவும், இதனால் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும் கிடைத்த தகவலின்படி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் மாதவராவ் என்பவருக்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விநியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஒரு டைரியையும் பறிமுதல் செய்தனர்.

 

இந்த டைரியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய தமிழக அமைச்சர்கள் மற்றும் மத்திய மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக குறிப்பிட்டிருந்ததாகத் தெரிகிறது. அந்த சர்ச்சையில் அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர்களும் அடிபட்டது.

 

இந்நிலையில் குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் மீது ஏற்கனவே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.