Skip to main content

''திருமாவளவனுக்கு கொள்கை இருந்தால் பேசட்டும்'' - நடிகை குஷ்பு பேட்டி! 

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

kushbu press meet in madurai

 

'சர்ச்சைக்குரியவற்றையே பேசுகிறார் திருமாவளவன். அவருக்கு கொள்கை இருந்தால் அதை மக்களிடம் பேசுவது நல்லது' என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார்.

 

பா.ஜ.க. சார்பாக மதுரை தெப்பக்குளத்தில் நேற்று 'நம்ம ஊர் பொங்கல்' விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

 

அப்போது பேசிய அவர், ''பா.ஜ.க. பெரிய அளவில் தமிழகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கிறது. அதற்கு யாரும் குரல் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. பிரதமர் நரேந்திர மோடி ஒருவர் குரல் கொடுத்தாலே போதுமானது. பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு மட்டுமின்றி, இந்தியாவிற்கே கொண்டு வந்துள்ளார். ஒவ்வொரு தெருக்களிலும் பா.ஜ.க.வின் கொடிப் பறக்கிறது என்பதில் மாற்றமில்லை.

.

நான் எங்கு போட்டியிட போகிறேன் என்பது எனக்கே தெரியாது. டெல்லி மேலிடத் தலைமையும், இங்கே இருக்கக்கூடிய தலைவர்களும் தான் அதை முடிவு செய்வார்கள். ஆனால் வருகிற சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக இருந்தாலும் சரி, யாரோடும் போட்டியிடுவதற்கு நான் தயாராக உள்ளேன்.

 

உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சு கண்டனத்துக்குரியது. கமலுக்கு நான் எதிராகப் பேசவில்லை, இருப்பினும் கூட, இல்லத்தரசிகள் தினந்தோறும் அவர் தம் இல்லங்களில் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் தங்களது அன்பின் காரணமாக இந்த பணிகளைச் செய்கிறார்கள் ஊதியத்தை எதிர்பார்த்து அல்ல.

 

பெண்களுக்கு எதிராக யார் பாலியல் வன்கொடுமை செய்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி பாரபட்சமின்றி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். திரையரங்குகள் 50% தற்சமயம் செயல்பட்டு வருகிறது. இதை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது என்பது என் கருத்து.

 

இந்தமுறை பிஜேபியின் சார்பாக அதிக பெண்கள் போட்டியிடுவதற்கு அனுமதி கொடுத்ததே பிரதமர் நரேந்திர மோடிதான். பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர்தான் பேசி வருகிறார். பல்வேறு திட்டங்களைக் கொண்டு வருகிறார். திருமாவளவன் சர்ச்சை பேசுவதே அவருடைய கொள்கையாக வைத்துள்ளார். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டிய கொள்கை ஏதேனும் அவரிடம் இருந்தால் அதை பேச சொல்லுங்கள்'' என்று தெரிவித்தார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.