ADVERTISEMENT

குஷ்பு மீது போலீஸில் புகார்!

07:05 PM Oct 14, 2020 | kalaimohan

ADVERTISEMENT

காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த குஷ்பு அண்மையில் பா.ஜ.கவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு, சிந்திக்கக்கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ். ஆறு வருடம் கழித்துதான் நடிகை என காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்ததா? காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களுக்கும், கட்சியை விட்டு செல்லுபவர்களுக்கும் மரியாதை இல்லை. பா.ஜ.க தலைவர் முருகன் எடுத்த முயற்சியால் தான் பா.ஜ.கவில் இணைந்து உள்ளேன் என தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT

பா.ஜ.கவில் இணைந்த பின் அவர் அளித்த பேட்டியில், மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் விதத்தில் பேசியதாக குஷ்பு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கம் இணைய வழியில் போலீசில் புகார் தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT