Skip to main content

எட்டு ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எந்த வளர்ச்சியும் இல்லை - குஷ்பு சாடல்...

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான ரூபி மனோகரனை ஆதரித்து காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான குஷ்பு, ரெட்டியார்பட்டி முன்னீர்பள்ளம் திடியூர் உள்ளிட்ட பல இடங்களில் பிரச்சாரம் செய்தார்.

 

kushboo in nanguneri campaigning

 

 

இரவு களக்காடு நகரின் பிரச்சாரத்தின் போது பேசிய குஷ்பு, "இந்தத் தொகுதி காமராஜரின் காலம் முதல் காங்கிரசின் தொகுதியாகவே இருந்து வருகிறது. இங்கு எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் செய்த பணிகள் பற்றி உங்களுக்குத் தெரிந்தது தான். அந்த நற்பணிகள் தொடர ரூபி மனோகரனுக்கு கை சின்னத்தில் வாக்களியுங்கள். இங்கு பஸ் வசதி இல்லை என்று ஒரு கிராமத்தில் மக்கள் என்னிடம் கூறினார்கள். ரூபி மனோகரனை வெற்றி பெறச் செய்தால் அவர் பஸ் வசதி செய்து தருவார். அப்போது நானும் வருவேன் என்றேன்.

தற்போதைய அ.தி.மு.க.வின் எட்டு ஆண்டு கால ஆட்சியில் ஒரு நல்ல திட்டங்கள் கூடக் கொண்டு வரப்படவில்லை. ஏதாவது ஒரு திட்டம் கொண்டு வந்தேன் என்று அவர்களால் சொல்ல முடியுமா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. மக்களுக்கு நல்லது செய்ய ஒரு மனது வேண்டும். அந்த மனது தி.மு.க.விடம் உள்ளது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத் திட்டங்களைக் காமராஜர் கொண்டு வந்தார். அதன் பின் அவரது வழியில் தி.மு.க.வினர் ஆட்சி செய்தனர்" என்று பேசினார்.

பிரச்சாரத்தின் போது கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சர்ச்சையான குஷ்புவின் பேச்சு; உருவப்படத்தை எரித்து போராட்டம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle in Trichy against Kushboo speech

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். அப்போது குஷ்புஉருவ படத்தை கிழித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் துர்கா தேவி, மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கவுன்சிலர் மஞ்சுளா தேவி, பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல், திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமை வகித்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, விசாலாட்சி உள்ளிட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். இதில் குஷ்பு உருவ படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.