Skip to main content

இந்த பொங்கலுக்கு வாரிசா? துணிவா? - சட்டென பதிலளித்த குஷ்பூ

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

kushboo answer varisu and thunivu movie

 

இந்த பொங்கலுக்கு நீங்க வாரிசு படத்திற்கு போவீங்களா? இல்ல துணிவு படத்திற்கு போவீங்களா எனச் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு சட்டென பதிலளித்த குஷ்பூவின் வீடியோ காட்சிகள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், கோவையை அடுத்த வெள்ளலூர் நெடுஞ்சாலை பகுதிக்கு அருகே பாஜக சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா என்ற பெயரில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பாஜக தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கலந்துகொண்டார்.

 

அப்போது, வெள்ளலூர் பகுதியை சேர்ந்த மக்களுடன் ஒன்றாக பொங்கல் வைத்த குஷ்பு, அவர்களோடு சேர்ந்துகொண்டு கையில் வண்ண உடைகளுடன் கும்மியாட்டம் ஆடி அசத்தினார். அதன்பிறகு, ரேக்ளா வண்டியில் ஏறி சிறிது தூரம் பயணம் செய்ததை அடுத்து ரேக்ளா பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர், பாஜக நிர்வாகிகளுடன் மேடையில் இருந்த குஷ்பூ காளைகள் சீறிப்பாய்ந்து ஓடுவதை பார்த்து கைதட்டி வரவேற்றார்.

 

இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசும்போது, “தமிழ்நாட்ட எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். தமிழகம், தமிழ்நாடு என ரெண்டுமே ஒண்ணுதான். இந்தியாவின் முக்கிய அங்கம் தான் தமிழகம். அதுல தப்பில்ல” என ஆளுநர் கருத்துக்கு ஆதரவாக பேசினார். அப்போது, அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் தமிழக பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையே எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த குஷ்பூ, “பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கு. எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகலயே. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். அப்படி எதுவும் இல்ல” எனப் பேசினார்.

 

மேலும், இந்த பொங்கலுக்கு நீங்க வாரிசு படத்திற்கு போவீங்களா? இல்ல துணிவு படத்திற்கு போவீங்களா எனக் கேட்ட கேள்விக்கு.. “நா எந்த படத்துக்கும் போகல. வீட்ல தான் இருப்பேன்” எனக் கிண்டலாகப் பதிலளித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குஷ்பு மீது போலீசில் புகார்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Police complaint against Khushbu

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும், கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் திமுக மகளிர் அணி சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் ,சேலம், ஈரோடு, எடப்பாடி என தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதுச்சேரியிலும் 'குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும்' என வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சில இடங்களில் அவரது உருவப்படங்கள் எரிக்கப்பட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை குறித்து அவதூறாக பேசிய நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்குமாறு ஈரோடு பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சர்ச்சையான குஷ்புவின் பேச்சு; உருவப்படத்தை எரித்து போராட்டம்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
struggle in Trichy against Kushboo speech

மகளிர் உரிமை திட்ட பயனாளிகளை இழிவுபடுத்தி பேசியதாக பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்பு மீது புகாரும் கண்டனமும் எழுந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு கட்டபோராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருச்சியில் மத்திய மாவட்ட மகளிர் அணி சார்பில், மத்திய பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தலைமை வகித்தார். அப்போது குஷ்புஉருவ படத்தை கிழித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இந்நிகழ்வில் மண்டலக் குழு தலைவர் துர்கா தேவி, மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, கவுன்சிலர் மஞ்சுளா தேவி, பாலசுப்பிரமணியன் மற்றும் திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதேபோல், திருச்சி உறையூர் குறத்தெரு பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் மதனா தலைமை வகித்தார். இதில் மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி, விசாலாட்சி உள்ளிட்ட மகளிர் அணியினர் பங்கேற்றனர். இதில் குஷ்பு உருவ படத்தை எரித்து கண்டன முழக்கம் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.