Skip to main content

குண்டாஸ் கைதி தற்கொலை; மாஜிஸ்ட்ரேட் சிறையில் விசாரணை..!

Published on 29/01/2021 | Edited on 29/01/2021

 

Kundas prisoner passes away; Magistrate investigation jail

 

சேலம் அரசு மருத்துவமனையில் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து குண்டாஸ் கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து சேலம் நீதித்துறை நடுவர் நேரில் விசாரணை நடத்தினார். 

 

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள நாகரசம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துவேல் (29), கூலித்தொழிலாளி. குடிப்பழக்கத்தற்கு அடிமையான இவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது தாய் மற்றும் சித்தியை அடித்துக்கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

 

அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் பாய்ந்தது. இந்நிலையில் ஜன. 16ஆம் தேதி சிறையின் மேல் மாடியில் இருந்து திடீரென்று கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவருடைய முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையின் இரண்டாம் தளத்தில் உள்ள ஆர்த்தோ பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 

மதுப்பழக்கத்தால் பெற்ற தாயையும், சித்தியையும் ஈவிரக்கமின்றி அடித்துக் கொலை செய்ததால், இனி ஆயுசுக்கும் வெளியே செல்ல முடியாது என சக கைதிகள் அவரிடம் சொன்னதால், கடும் விரக்தியில் இருந்ததாகவும், அதனால் மனம் உடைந்து முத்துவேல் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

 

சிகிச்சையில் இருந்தபோதும் அவர், தனக்கு வாழ விருப்பமில்லை என்று அடிக்கடி சொல்லி வந்துள்ளார். இந்நிலையில், ஜன. 27ம் தேதியன்று, மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் உள்ள கழிப்பறைக்குச் சென்ற அவர், ஜன்னல் வழியாக கீழே எகிறி குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

 

கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டால், அதுகுறித்து மாஜிஸ்ட்ரேட் நேரடியாக விசாரிக்க வேண்டியது நடைமுறை. அதன்படி, சேலம் நீதித்துறை நடுவர் ராஜபிரபு, சேலம் அரசு மருத்துவமனையில் வியாழக்கிழமை (ஜன. 28) நேரில் விசாரணை நடத்தினார். 

 

சம்பவத்தின்போது பணியில் இருந்த மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சிறைக்காவலர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். அவர் சிகிச்சை பெற்று வந்த வார்டு, கழிப்பறை ஆகியவற்றையும் பார்வையிட்டார். அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

 

இதையடுத்து முத்துவேலின் சடலம் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, அவருடைய தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது. சேலத்திலேயே அவருடைய சடலத்தை அடக்கம் செய்தனர். 

 

மேலும், சேலம் மத்திய சிறையில் எஸ்.பி., மாடியில் இருந்து குதித்தபோது அவரை தூக்கிய கைதிகள், சிறைத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்டோரிடமும் நீதிமன்ற நடுவர் ராஜபிரபு விசாரணை நடத்தினார். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நடந்தது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

இறுதிக்கட்ட பரப்புரை; சேலத்தில் எடப்பாடி 'ரோட் ஷோ'

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 Final campaign; Edappadi 'Road Show' in Salem

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இதற்கிடையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தஙளது வேட்பாளர்களை அறிவித்து தீவிரப் பிரச்சாரங்கஙளை நடத்தி வருகின்றனர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. இன்னும் ஒரு மணி நேரத்தில் தேர்தல் பரப்புரை முடிவடைய இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 'ரோட் ஷோ' என்னும் வாகன பேரணியைத் தொடங்கியுள்ளார். சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் தொடங்கி சேலம் டவுன் வரை இந்த ரோட் ஷோ நடைபெறுகிறது. திறந்தவெளி வாகனத்தில் கை அசைத்தபடி வேட்பாளருடன் எடப்பாடி பழனிசாமி வாகன பேரணி நடத்தி வருகிறார். அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து வின்சென்ட், திருவள்ளுவர் சிலை, முதல் அக்ரகாரம், சின்ன கடைவீதி, கடைவீதி உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்று இறுதியாகக் கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்ய இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.