Skip to main content

25 வழக்குகளில் தொடர்புடைய பிரபல கார் திருடன் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது!

Published on 24/11/2018 | Edited on 24/11/2018

சேலத்தில் பிரபல கார் கொள்ளையனை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


சேலம் அஸ்தம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் பூபதி என்கிற மைக்கண் பூபதி (32). கடந்த 2017ம் ஆண்டு, கொண்டலாம்பட்டி அருகே ஒரு கார் ஷெட்டில் பணியில் இருந்த இரவுக்காவலரை தாக்கிவிட்டு, அங்கிருந்த ஸ்கார்ப்பியோ, குவாலிஸ் ஆகிய இரண்டு கார்களை கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடிச் சென்றார்.

 

car theft


இச்சம்பவம் நடந்த சில நாள்களில் அதே பகுதியில் ஒருவரிடம் கத்திமுனையில் 2000 ரூபாய் பறித்தார். இது தொடர்பான வழக்குகளில் பூபதி, கூட்டாளிகள் முகைதீன் அப்துல் காதர், கோபாலகிருஷ்ணன், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் திருடிச்சென்ற கார்களும் மீட்கப்பட்டன.


பின்னர் ஜாமினில் வெளியே வந்த பூபதி, மீண்டும் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு கடந்த ஜூலை மாதம் கடலூர் மாவட்டம் முத்தாண்டிகுப்பத்தில் இரண்டு கார்களை திருடினார். இந்த வழக்கிலும் பூபதியும், திருவண்ணாமலையைச் சேர்ந்த காளியப்பன் என்பவரையும் கடலூர் போலீசார் கைது செய்தனர். 


அந்த வழக்கிலும் ஜாமினில் வெளியே வந்த பூபதி, கடந்த 30.10.2018ம் தேதியன்று, சேலம் சொர்ணபுரி பகுதியில் ராமராஜ் என்பவரிடம் கத்தி முனையில் 1060 ரூபாயை வழிப்பறி செய்தார். 


மீண்டும் அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்ட வந்த பூபதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர், குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனர் சங்கருக்கு பரிந்துரை செய்தனர். அவருடைய உத்தரவின்பேரில் பூபதியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 


கைதான பூபதி என்கிற மைக்கண் பூபதி மீது சேலம் மாநகர, சேலம் மாவட்டம், நாமக்கல், கடலூர் மாவட்டங்களில் 23 திருட்டு உள்பட மொத்தம் 25 வழக்குகள் உள்ளன என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.