Skip to main content

குணங்குடி ஹனீபா புகார் எதிரொலி - கிண்டி ரயில் நிலையத்தில் மீண்டும் தமிழ்...

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

 

சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் வேளச்சேரி பகுதியில் இருந்து வருபவர்கள் பயணச் சீட்டு பெறும் இடத்தில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருந்தது. இதுதொடர்பாக தமுமுகவின் குணங்குடி ஹனீபா ரயில் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தனர். 

 

Kunangudi Hanifa


 

இந்த நிலையில் தற்போது டிக்கெட் எடுக்கும் இடத்தில், ''கிண்டி பயணச்சீட்டு அலுவலகம்'' என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
 

இதுகுறித்து நம்மிடம் பேசிய குணங்குடி ஹனீபா, டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஆங்கிலம், இந்தியில் தகவல்கள் உள்ளது. அதனை மாற்றவில்லை. வெளியே ரயில் நிலையத்தில் நுழையும் இடத்தில் ''கிண்டி பயணச்சீட்டு அலுவலகம்'' என போர்டு வைத்துள்ளனர். இதுவே எனக்கு பெரிய வெற்றிதான். தமிழ் மொழியில் போர்டு இல்லை என்ற ஆதங்கத்தில் புகார் எழுதிக்கொடுத்தேன். நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். மொழிக்காக எவ்வளவோ தியாகம் செய்திருக்கிறோம். இந்த நிகழ்வு எனது வாழ்க்கையில் பெரிய சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்றார். 
 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திருச்சி ரயில் நிலையத்தில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arbitrary seizure of money at Trichy railway station!

திருச்சி ரயில் நிலையத்தில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் ரூ. 1.44 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து திருச்சி நோக்கி வந்த ரயிலில் போலீஸார் மேற்கொண்ட சோதனையில், இளைஞர் ஒருவர் கட்டுக்கட்டாக பணத்தாள்களை வைத்திருந்தார். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது,. அவர் மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த நாகவேல்ராஜா (25) என்பதும், மளிகை பொருட்கள் மொத்த வியாபாரம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வருவதும், மளிகை பொருட்கள் அனுப்பிய வகையில், நிலுவையில் இருந்த பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 44 ஆயிரத்து 618 ரொக்கத்துக்கான ஆவணங்கள் ஏதும் அவரிடம் இல்லை.

இதைத்தொடர்ந்து ரயில்வே போலீசார் அந்த பணத்தை பறிமுதல் செய்து பறக்கும்படை அலுவலர் வினோத்ராஜ் மூலம் திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story

“அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா?” - ராமதாஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Ramadoss questioned Will Tamil ascend the throne?

தமிழ்நாடு அரசின் சார்பில் 2வது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் நடத்தப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், செம்மொழி மாநாட்டிற்கு முன்பாக கல்வி, வணிகம், நீதிமன்றங்களில் அன்னைத் தமிழ் அரியணை ஏறுமா? என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 

இது தொடர்பாக, ராமதாஸ் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “தமிழ்நாடு அரசின் சார்பில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சென்னையில் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நல்லது. அதற்குள்ளாகத் தமிழ்க் கட்டாயப் பாடம், தமிழ் பயிற்று மொழி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ்ப் பெயர்ப்பலகைகள் ஆகியவற்றை சாத்தியமாக்கி  அன்னைத் தமிழை அரியணையில் ஏற்றுமா தமிழக அரசு?” என்று தெரிவித்துள்ளார்.