Skip to main content

வீரசைவ மடத்தின் மடாதிபதியாக நீலகண்டர் பதவி வகிக்க தகுதியற்றவர்; பழைய நிர்வாகக்குழு வழக்கு தொடுக்க முடிவு.

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

கும்பகோணம் வீரசைவ மடாதிபதி அமைத்துள்ள கமிட்டி போலியானது, அது ஒருபோதும் செல்லாது என முன்னாள் நிர்வாக கமிட்டியின் கூட்டத்தைக்கூட்டி தீர்மானங்கள் போட்டுள்ளனர். கும்பகோணம் வீரசைவ பெரிய மடம் மகாமகம் வடகரையில் உள்ளது. பழைய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சித்திர துர்கா மடத்தின் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், வீரசைவமடத்தின் நீலகண்ட சுவாமிகள் அமைந்துள்ள கமிட்டி செல்லாது. மடத்திலிருந்து தங்கம் மற்றும் வெள்ளியிலான பூஜை பொருட்களை பெங்களூரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வைத்துள்ளதை திரும்ப மடத்திற்கு வைக்க வேண்டும். மைசூர் மகாராஜா வழங்கிய யானைத் தந்தத்தினால் ஆன பல்லக்கை மடத்திற்குள் வைக்க வேண்டும். பெங்களூர் சித்ரதுர்கா சுவாமிகளை அழைத்து கொண்டு வந்து வரும் 30 ஆம் தேதி கும்பகோணத்தில் கூட்டத்தை நடத்துவது.

 

 

mahamaham

 

 

 

வீரபத்திர சுவாமி கோவிலில் இருந்த விலைமதிப்பில்லா சோழர்கால உற்சவர் சிலை மற்றும் விலை உயர்ந்த வெள்ளி தங்கம் போன்ற அபிஷேகப் பொருட்கள் காணாமல் போனது குறித்து சிலை தடுப்புப் பிரிவு போலீசாரிடம் நீலகண்டன் மற்றும் கங்காதரன் ஆகியோர் மீது புகார் அளிப்பது. மடத்தின் கட்டிடத்தில் இயங்கி வரும் வாடகைதாரர்கள் வரும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் கோர்ட்டில் வாடகை செலுத்த வேண்டும் என்ற சட்ட ரீதியான அறிவிப்பை வாடகைதாரர்கள் அனுப்புவது. திருவாரூர் பிடாரி கோயில் தெருவில் உள்ள வீர சைவ மடத்தின் சொத்துக்களை கபளீகரம் செய்யும் நீலகண்டன் கங்காதரன் மற்றும் நில அபகரிப்பு ஈடுபட்டோர் மீது நில அபகரிப்பு போலீசாரிடம் புகார் அளிப்பது. நீலகண்டன் வீர சைவ மடத்தின் மடாதிபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக மேல்முறையீடு செய்வது," என்பன உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

 

kumbakonam

 

 

இதுகுறித்து விசாரித்தோம், " வீரசைவ பெரிய மடத்தில் சமீப காலமாக பிரச்சனைகள் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது. தற்போது மடாதிபதியாக இருக்கும் நீலகண்டர் தங்களுக்கு சாதகமான நிர்வாக குழுவை அமைத்து இருக்கிறார். அதேபோல் அவர் வசதிக்காக கங்காதரனையும் இளைய மடாதிபதியாக நியமித்து பிறகு நீக்கினார். இந்த நிலையில் பழைய நிர்வாக குழு அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததோடு, சித்திரை துர்கா மடத்தில் உள்ள பசவ மூர்த்தியை புதிய மடமாக நியமித்து முடிசூட்டி சர்ச்சையை கிளப்பினர்.

 

இந்த நிலையில் கும்பகோணம் ஆர்,டி,ஓ, தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி பழைய மடாதிபதியே நீடிப்பார் புதிய மடாதிபதி நியமானம் செல்லாது என கூறினார். இதுகுறித்து தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடி கொள்ளலாம் என கூறி விட்டார். இதற்கிடையில் புதிய நிர்வாக குழுவை அமைத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் நீலகண்டர். பழைய நிர்வாக குழுவினர், புதிய நிர்வாகக் குழு செல்லாது எனவும் நீலகண்டர் மடாதிபதியாக இருக்கத் தகுதியற்றவர் என்றும் கூறி வருகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.