Skip to main content

போலி வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை வேண்டும்; வழக்கறிஞர்கள் தீர்மானம்

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

வழக்கறிஞர்கள் போர்வையில் ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமுக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்கம்  வலியுறுத்தியிருக்கிறது.

 

Lawyers



 

கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற சங்க அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்க தலைவர் லோகநாதன் தலைமை வகித்து தீர்மானங்களை வாசித்தார். அதில், "வெளிமாநிலங்களில் சட்டப்படிப்பை முடித்து கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக வேலை பார்த்து வருபவர்கள் வக்கீல்களாக பதிவு செய்திருந்தால் அவர்கள் தங்களது சான்றிதழ்களை பார்கவுன்சில் ஒப்படைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பார் கவுன்சில் எடுக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் முழுஒத்துழைப்பை தரும்.
 

வழக்கறிஞர்கள் ஸ்டிக்கரை வழக்கறிஞர்கள் அல்லாதவர்கள் பல்வேறு வாகனங்களில் ஒட்டிக்கொண்டு அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். போலியாக வழக்கறிஞர்களின் ஸ்டிக்கரை பயன்படுத்தும் நபர்கள் மீது போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு வழக்கறிஞர்கள் முழு ஒத்துழைப்பை தறுவோம்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.


 

இது குறித்து வழக்கறிஞர் சங்க பொருப்பாளர்களிடம் விசாரித்தோம், "ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் காசுகொடுத்து சட்டப்படிப்பிற்கான டிகிரியை வாங்கிக்கொண்டு, முடித்தும் முடிக்காமலும் அரியர்களோடு வழக்கறிஞர்கள் அணியும் கருப்புக்கோட்டை அணிந்துகொண்டு, வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட அனைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களின் என்னிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அப்படிபட்டவர்கள் பெரும்பாலும் சாராய வியாபாரிகளுக்கு ஆதரவாக நின்றுகொண்டு மக்களை மிரட்டுகின்றனர். அதோடு  மணல் மாபியாக்களுக்கு கைக்கூலிகளாகவே மாறிவிட்டனர்.
 

 படிப்பை முடிக்காமலேயே வழக்கறிஞராக பதிவு செய்யாமல், வழக்கறிஞர்களுக்கு பார்கவுன்சிலில் வழங்கப்படும் ஸ்டிக்கரை  கடைகளில் வாங்கி ஒட்டிக்கொண்டு நீதிமன்றங்களுக்கே வருகின்றனர். அதோடு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரும் பயன்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. மகன் வழக்கறிஞருக்கு படித்துக்கொண்டிருக்கும் நிலையில் அவருடைய தந்தையும் அண்ணன்களும், தம்பிகளும் வழக்கறிஞர் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு பல்வேறு தவறான வேலைகளில் ஈடுபடுவது கும்பகோணம் பகுதியில் அதிகமாகவே பார்க்க முடிந்தது அதனால் இந்த நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டு வந்திருக்கிறோம்," என்கிறார்கள்.
 

 

  

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.