Skip to main content

கும்பகோணத்தில் தொடரும் கொலைகள்!

Published on 20/10/2020 | Edited on 20/10/2020

 

Kumbakonam lawyer incident

 

கோயில்கள் நிரம்பிய நாச்சியார் கோயில் பகுதி, சமீபகாலமாக கொலை கூடாரமாக மாறி வருகிறது. ஏற்கனவே நடந்த கொலைகளுக்கு முடிவு தெரியாத நிலையில், வழக்கறிஞர் உள்ளிட்ட இரண்டு பேர், ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

 

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள பழவர்த்தான் கட்டளை, குப்பான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் வயது 45. வழக்கறிஞரான இவர் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தில் கும்பகோணம் நகரப் பொறுப்பாளராக இருந்துவருகிறார். காமராஜுக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே நிலத்தகராறில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 

 

இந்நிலையில், திங்கள் இரவு கும்பகோணத்தில் இருந்து பிளாஞ்சேரி சாலையில் காமராஜ் மற்றும் அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (35) என்பவருடன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் வழிமறித்தனர். இரவில் திடீரென தனது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் சிலர் மறிப்பதை பதட்டத்துடன் கவனித்து, அருகே வருவதற்கு முன்பே, சந்தேகமடைந்த காமராஜும் அவரது நண்பரும் பைக்கை போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.

 

ஆனால், அதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் தயாராக வைத்திருந்த அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் காமராஜரையும், அவரது நண்பர் சக்திவேலையும் சரமாரியாக வெட்டினர். பலத்த வெட்டுக் காயங்களுடன் கொலையாளிகளிடம் இருந்து தப்பி ஓடிய சக்திவேல் அருகே உள்ள வயலில் விழுந்து பரிதாபமாக இறந்தார். கொலையாளிகளிடம் சிக்கிய காமராஜ் தலைசிதைக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

தகவலறிந்த திருவிடைமருதூர் பகுதி போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று காமராஜ் மற்றும் சக்திவேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடம் காமராஜின் வீட்டிற்கு அருகே உள்ள பகுதி என்பதால், அவரது உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்தப் பகுதியே பரபரப்பானது.

 

Ad

 

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நம்மிடம், "நாச்சியார்கோவில் காவல்நிலையம் கட்டப்பஞ்சாயத்தின் கூடாரமாகவே சமீப காலமாக மாறிவிட்டது. மணல் கடத்தல், சாராயக் கடத்தல், கள்ள மதுவிற்பனை என பணம் மட்டுமே புழங்கும் நிலையமாக மாறி விட்டது. இங்கு ஏற்கனவே பல கொலைகள் நடந்திருக்கிறது, அதற்கு முடிவு இல்லாமலேயே தொடர்ந்து வருகிறது" என்கிறார் அச்சத்துடன்.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.