Skip to main content

கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்திப் பேரணி!

Published on 20/02/2021 | Edited on 20/02/2021

 

kumbakonam district needed peoples and all political parties rally

 

மயிலாடுதுறையைத் தொடர்ந்து கும்பகோணத்தையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து பெருந்திரள் பேரணி நடத்தது. கும்பகோணத்தைப் புதிய மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி நீண்ட நாட்களாகப் போராட்டம் நடத்து வருகிறது. அந்த வகையில், இன்று (20/02/2021) பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என பெருந்திரள் பேரணி கும்பகோணத்தில் நடந்தது.

 

இந்தப் பேரணி கும்பகோணம் மொட்டைக் கோபுரம் பகுதியில் தொடங்கி பழைய மீன் மார்க்கெட்டில் நிறைவடையும் என அறிவித்திருந்தனர் போராட்டக்குழுவினர். அதன்படி, நூற்றுக்கணக்கானோர் மொட்டைக்கோபுரம் பகுதியில் திரண்டனர். இதனால் அந்தப் பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அங்குவந்த தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் பேரணி செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த போராட்டக்குழுவினர், காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நீண்டநேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் பேரணியை 1 கிலோ மீட்டர் தூரத்துக்குள் நடத்தி முடித்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்திய காவல்துறையினர் பேரணிக்கு அனுமதி வழங்கினர். 

 

kumbakonam district needed peoples and all political parties rally

 

அதைத் தொடர்ந்து, பேரணியை திருப்பனந்தாள் காசி மட அதிபர் ஸ்ரீலஸ்ரீ எஜமான் சுவாமிகள் தொடங்கி வைத்தார். மொட்டைக் கோபுரம் பகுதியில் தொடங்கிய பேரணி உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே முடிவடைந்தது. உச்சிப் பிள்ளையார் கோயில் பகுதியில் போராட்டக் குழுவினர் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பெரும் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பேரணி மற்றும் போராட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

"கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்க வேண்டும் என அரசுக்குப் பல்வேறு  கோரிக்கைகளை விடுத்து வருகிறோம். கோரிக்கையை வலியுறுத்தி பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறோம், ஆனாலும் அரசு செவிசாய்த்திடவில்லை. இந்த நிலையில் இன்று (20/02/2021) தனி மாவட்டம் கோரும் போராட்டக் குழுவின் சார்பில் பொதுமக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒன்று சேர்ந்து பேரணி நடத்தி எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்" என்கிறார்கள் போராட்டக் குழுவினர். 


  

சார்ந்த செய்திகள்

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். 

Next Story

தடையை மீறி கடலில் குளித்த மாணவி உயிரிழப்பு; தேடச் சென்ற மாணவர்கள் மாயம் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
A student who broke the ban and bathed in the sea lose their live; The students who went to look for magic

காரைக்காலுக்கு சுற்றுலா சென்ற கல்லூரி மாணவிகளில் ஒருவர் கடலில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரைக் காப்பாற்றச் சென்ற இரு மாணவர்களும் காணாமல் போனதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவ - மாணவிகள் காரைக்கால் கடற்கரை பகுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். அப்போது மாணவிகள் இருவர் தடையை மீறி கடலில் இறங்கிக் குளித்ததாகக் கூறப்படுகிறது. திடீரென தண்ணீரில் மூழ்கிய அந்த மாணவிகளை மீட்க மாணவர்கள் இருவர் கடலில் இறங்கினர். ஆனால் மாணவியை மீட்கக் கடலில் இறங்கிய இரண்டு பேரும் காணாமல் போயினர்.

இதுகுறித்து கடலோர காவல் படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் அதிகாரிகள் காணாமல் போன மாணவர்களைத் தேடி வருகின்றனர். தடையை மீறி கடலில் இறங்கிய மற்றொரு மாணவி மீட்கப்பட்டு காரைக்கால் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி தடையை மீறி கடலில் இறங்கிக் குளிக்க நேர்ந்தபோது ஏற்பட்ட உயிரிழப்பு சம்பவமும், தொடர்ந்து தேடச் சென்ற மாணவர்கள் காணாமல் போன சம்பவமும் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.