Skip to main content

ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம் ரூபாய் முறைகேடு; அ.தி.மு.க. - தி.மு.க. மல்லுக்கட்டு!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

kumbakonam


கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கரோனா நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி, பிளீச்சிங் பவுடர், சுண்ணாம்பு பவுடர், கருப்பு பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் சுமார் 89 லட்சம் ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக ஒன்றியக்குழு உறுப்பினர்கள் குற்றச்சாட்டி எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
 


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் 2 ஆவது கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி அசோக்குமார் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்குழலி முன்னிலையில் நடந்தது. மொத்தமுள்ள 27 ஒன்றியக் குழு உறுப்பினர்களில் அ.தி.மு.க., பா.ஜ.க., உறுப்பினர்கள் 9 பேரும், தி.முக. உறுப்பினர்களில் 12 பேர் மட்டும் வந்திருந்தனர். தி.மு.க. உறுப்பினர்கள் 5 பேர் வரவில்லை. மீதமுள்ள ஒரு உறுப்பினரான 24 வது வார்டு உறுப்பினர் சுகுமார் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி இறந்துவிட்டார்.

கரோனா விவகாரத்திற்கு இடையே நடந்த கூட்டத்தில் இறந்த உறுப்பினரான சுகுமாரனுக்கு அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், 119 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பல்வேறு ஊராட்சிகளில் சாலை வசதிகள், குளங்கள், சுற்றுச்சுவர்கள், ஈமகிரியை மண்டபம் கட்டுதல் உட்பட ரூபாய் 2 கோடியே 72 லட்சத்தி 35 ஆயிரம் மதிப்பிலான 50 பணிகள் மேற்கொள்ளுதல் குறித்தான தீர்மானங்கள் நிறைவேற்றினர். மேலும் கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தை உருவாக்கிட அரசிற்கு கோரிக்கை வைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 

 

kumbakonam  22


இதற்கிடையில் கரோனோ நோய்த் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கொள்முதல் செய்யப்பட்ட கிருமிநாசினி, சுண்ணாம்பு பவுடர், பிளீச்சிங் பவுடர், கருப்பு பினாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதில் தஞ்சை மாவட்டத்தில் எந்த ஒரு ஒன்றியமும் செலவழித்திடாத வகையில் ரூபாய் 89 லட்சம் செலவிட்டிருப்பதாக பல்வேறு தீர்மானங்களுக்கு இடையே கூறப்பட்டிருந்தது.

இதனைப் படித்துப் பார்த்த அ.தி.மு.க. ஒன்றியக் குழு உறுப்பினர்கள் இதனைக் கடுமையாக எதிர்த்துப் பேச, பதிலுக்கு தி.மு.க. உறுப்பினர்களும் பேசினர். பேச்சு கடுமையான வாக்குவாதமாக மாறி கைகலப்பு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. "பொருட்கள் வாங்கியதற்கான சான்று ஆவணங்களைக் கூட்டத்தில் வைக்கவில்லை என்றும், கணினி மென்பொருள் நிறுவனத்தில் இருந்து கிருமி நாசினி வாங்கியதாகக் குறிப்பிட்டு இருப்பதுமே இதில் முறைகேடு நடந்திருப்பதை ஊர்ஜிதம் செய்கிறது" எனக் குற்றம்சாட்டி முழக்கமிட்டனர். இதனால் போலிஸார் குவிக்கப்பட்டனர்.
 

http://onelink.to/nknapp


செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. உறுப்பினர்கள், "இது குறித்து விரைவில் நாங்கள் அனைவரும் தஞ்சை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிடவுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

ஏற்கனவே காயத்திரி அசோக்குமார் ஒன்றியக்குழு தலைவராக பதவி ஏற்றபோது, முதல் கூட்டத்தை யாகம் நடத்தி துவங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடுத்து நடந்த இரண்டாவது கூட்டமே மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.