Skip to main content

கும்பகோணத்தில் அதிகரித்துவரும் பிளாஸ்டிக் பை; வணிகர்களுக்கு உணர்த்திய அதிகாரிகள்

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

கும்பகோணம் நகரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை படுஜோராக நடப்பதாகவும், உபயோகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சில கடைகளில் ஆய்வு செய்ய வந்தனர்.  நகராட்சி அதிகாரிகள், அவர்களை தடுத்து நிறுத்தி குடைச்சல் கொடுத்த வணிகர்களை சாதுர்யமாக குப்பைக்கிடங்கு இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று இது நியாயமா என கேள்வி கேட்டு நோகடித்து பலரையும் நெகிழவைத்துள்ளது.

 

k

 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பந்தநல்லூர்,  பகுதியில் பல்வேறு வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியே வருகின்றனர். நகர் நல அலுவலர்கள் கடந்த எட்டு மாதங்களாக அவ்வப்போது வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அபராதமும் முதல் தடவை எச்சரிக்கை நோட்டீசும் வழங்கி வருகின்றனர்.

 

 இந்தநிலையில் கும்பகோணம் மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரேமலதா தலைமையில் அதிகாரிகள் பழைய மீன் மார்க்கெட் அருகே உள்ள வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி ஆய்வுக்கு சென்றனர். அப்போது வணிக நிறுவனத்தினர் நகராட்சி அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளோ கும்பகோணத்தில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வணிகர் சங்க நிர்வாகிகள் ஆய்வு நடந்த இடத்துக்கு வந்து நகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்," மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு கும்பகோணம் வணிகர்கள் எப்போதும் ஒத்துழைப்பு தருகிறோம் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய ஒரு சில இடங்களில் இப்படி பயன்படுத்தப்படுகிறது. இனிமேல் அதையும் நாங்கள் பயன்படுத்த மாட்டோம்." என வனிகர்கள் அதிகாரிகளிடம் கூறினர்.

 

அதிகாரிகளோ, "இப்போது பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியதற்கு அபராதம் விதிப்பதாக கூறினர்.  இதனால் ஆத்திரமடைந்த வணிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததோடு,  அபராதம் விதித்தால் நாங்கள் கடையடைப்பு நடத்துவோம்." என கர்ஜித்தனர்.

 

இதையடுத்து நகர் நல அலுவலர்ககளும், பணியாளர்களும் ஆய்வை தடுக்க வந்த கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன் செயலாளர் சத்யநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு கும்பகோணம் நகராட்சியில் குப்பை கிடங்கு உள்ள கரிகுளத்திற்கு அழைத்துச்சென்று. அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை காட்டினர். அப்போது அங்கு குவிந்திருந்த பிளாஸ்டிக் பைகள் அடங்கிய குப்பைகளை பார்த்து வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மளைத்துபோனார்கள். அப்போது நகர்நல அலுவலர் பிரேமலதா," கும்பகோணம் நகரில் நாளொன்றுக்கு 70 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 20 சதவீதம் பிளாஸ்டிக் பைகள் தான் இந்தப்பைகள்.  எப்படி வருகிறது வணிகர்களால் தானே வருகிறது. இதை உங்களால் மட்டுமே தடுக்க முடியும் என்றார்.

 

அதை பார்த்து நெளிந்த வனிகர்கள்," இனிமேல் கும்பகோணம் நகரில் பிளாஸ்டிக் விற்பனை இருக்காது. நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம்." என்று உறுதியளித்தனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.