Skip to main content

அமமுக நிர்வாகி கட்டிடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி; கும்பகோணம் பகுதி பரபரப்பு

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியின் சொந்த ஓட்டுக்கட்டிடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.

 

 நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர் ஒரு வாரத்திற்கு முன்பு தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் பொன்.த. மனோகரனின் சொந்த ஊரான நெய்வாசலில் உள்ள பாழடைந்த ஓட்டு கட்டடத்தில் உள்ள சிறு அறையை வாடகைக்கு எடுத்து வெல்டிங் தொழில் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் 18 ஆம் தேதி மாலை கடையைத்திறக்கும் போது ஷட்டரில்  பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

a

 

இது குறித்து பந்தநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, உடற்கூறாய்வுக்காக ஜெயராமனின் உடலை திருப்பனந்தாள் மருத்துவமனைக்கு அனுப்பினர்.  அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கட்டிடடத்தை வாடகைக்குவிட்ட உரிமையாளர் மீதும், தகுதியற்ற கட்டிடத்திற்கு மின் இனைப்பு வழங்கிய மின்சாரத்துறையினர்  மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு உடலை வாங்க மறுத்தனர்.

 

பிறகு திருவிடைமருதூர் டி,எஸ்,பி பாதிக்கப்பட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்கு பதியப்படும் என கூறினார். இதையடுத்து உடலை வாங்கிச்சென்றனர்.

 

 இதுகுறித்து ஜெயராமனின் உறவினர்களிடம் விசாரித்தோம்," மனோகரன் தனது சொந்த ஊரான நெய்வாசல் மெயின் ரோட்டில் சேர்மனாக இருக்கும்போது வரிசையா கடை கட்டி வைத்திருக்கிறார். அதில் ஓட்டுக்கட்டிடங்களும் இருக்கு. அந்த ஓட்டுக்கட்டிடத்தில் கடைசியாக உள்ள கடையை கடந்த வாரம் வாடகைக்கு எடுத்து வெல்டிங் ஒர்க் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் ஜெயராமன்.   அந்த கடைக்கு கதவு இல்லாமல் போனதால் பக்கத்தில் உள்ள ரீவைண்டிங் கடையில் வெல்டிங்கிற்கான பொருட்களை வைத்திருந்தார்.

 

18 ம் தேதி வேலைக்கு ஜாமான்களை எடுக்க ரீவைண்டிங் கடையின் ஷெட்டரை திறந்தபோது, அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். கட்டிட உரிமையாளரான மனோகரனோ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ரீவைண்டிங் கடைக்காரர் மீது பழியை போடுகிறார். ஆனால் மின் கசிவு ஏற்பட்டதற்கான காரணமோ, பாதுகாப்பற்ற நிலையில் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு போகும் ஒயரில் தேய்வு ஏற்பட்டே நடந்துள்ளது. இதனை மறைக்க அவர் ரீவைண்டிங் கடைக்காரர் மீது வைக்கிறார். நீதிமன்றம் வாயிலாகவும், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரை சந்தித்தும் நியாயம் கேட்போம்," என்கிறார்.

 

a

 

பொன்.த.மனோகரன் நாடாளுமன்ற தேர்தலின் போது அமமுகவின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளருக்கு வழங்கப்பட்ட பணத்தை அப்படியே ஆட்டைய போட்டுவிட்டார் என அக்கட்சியினர் கட்சியின் மேல் இடத்திற்கு புகார் வாசித்துவிட்டு கடுப்பில் இருக்கின்றனர். 

 

அக்கட்சிக்காரர்களிடம் விசாரித்தோம், " அதிமுகவில் இருக்கும்போது ஆரம்பத்தில் தஞ்சாவூர் தங்கமுத்துவின் ஆதரவாளராக இருந்தார். பிறகு அவரை ஏமாற்றிவிட்டு மாவட்ட செயலாளராக மாறி 6 மாதத்தில் 6 கோடியை சம்பாதித்தவர் என பொறுப்பிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். பிறகு மன்னார்குடி திவாகரனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தனது மகன்களின் திருமணத்தை டாக்டர் வெங்கடேஷ்,திவாகரனை அழைத்துவந்து நடத்தி தனக்கு சசிகலா குடும்பத்தோடு ஆதரவு இருப்பதாக காட்டிக்கொண்டார்.


இந்த நிலையில் அதிமுக அமமுக பிரியும்போது அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டார் கிடைக்காத பட்சத்தில் அமமுகவிற்கு தாவி ஒன்றிய செயலாளராக மாறினார்.

 

இதற்கு இடையில் அதிமுகவில் இருக்கும்போது திருப்பனந்தாள் ஒன்றிய சேர்மனாக இருக்கும்போது பல்வேறு முறைகேடுகளை செய்து கோடிகளை குவித்தார். திருமங்கைச்சேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவாராக இருந்துகொண்டு பல லட்சம் சுறுட்டினார். தலித் சமுகத்தவருக்கு வழங்கக்கூடி தாட்கோ கடனைக்கூட விட்டுவைக்காமல் அவரது வீட்டில் வேலைப்பார்பவர்கள் பெயரில் வாங்கியிருக்கிறார். இவரால் கட்சிக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எந்தப்புண்ணியமும் கிடையாது. ஏழைகளுக்கு வழங்கப்படும் கான்கிரீட் வீடுகள், பசுமை வீடுகள் பத்துக்கும் அதிகமாக கட்டி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்.

 

அதேபோல் அணைக்கரை பாலத்தில் பழுது பார்த்த போது அங்கு கிடைத்த ஓடுகளை கொண்டு வந்து வரிசையாக கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார், அதற்கு வயரிங் தரமாக செய்யாமல் காசுக்காக கடமைக்கு செய்து இப்படி ஒரு உயிரை காவுவாங்கி விட்டு தப்பிக்க அப்பாவி மீது பழியைப்போடுகிறார். தினசரி மணல் கொள்ளையில் ஒரு நாள் லாபத்தை அந்த குடும்பத்திற்கு கொடுத்தாலே புன்னியமாகியிருக்கும், அதைகூட செய்யாமல் அட்சியம் செய்கிறார். சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தாலே இவர் மாட்டிக்கொள்வார். காக்கிகள் அதில் ஆர்வம் காட்ட வேண்டும்."என்கிறார் ஆதங்கமாக.

சார்ந்த செய்திகள்

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார். 

Next Story

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Property details of Trichy parliamentary constituency candidates

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வந்தன. இதனைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி துவங்கி 27ம் தேதி வரை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் பல்வேறு தொகுதிகளிலும் முக்கிய கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து மதிப்பு விவரங்களைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகியுள்ளது.

ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ:
 
திருச்சி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர்களில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவுக்கு ரூ. 35.90 கோடிக்கு சொத்து உள்ளதாக அவரது வேட்பு மனுவுடன் இணைத்துள்ள ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்.

ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ ரூ. 2,05,000, அவரது மனைவி கீதா ரூ. 5,02,000, மகன் வருண் ரூ. 2,500, மகள் வானதி ரேணு ரூ. 2,000. மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் அசையும் சொத்தாக ரூ. 2,18,94,789, அசையா சொத்துக்கள் ரூ. 33,71,89,498 என மொத்தம் ரூ.35,90,84,287(35.90 கோடி)உள்ளது. மேலும் ஒரு கார் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கடன் ரூ.1,35,65,000 உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். (2.07 கிலோ தங்க நகைகள், 6.38 வெள்ளி, ரூ.19 லட்சம் மதிப்பிலான வைர நகைகள் உள்பட ரூ.1.35 கோடி கடன்). துரை வைகோ மீது எந்த வழக்கும் இல்லை.

அ.தி.மு.க. வேட்பாளர் ப. கருப்பையா:

அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா, அவரது மனைவி விமலா, மகன் குருநாத் பன்னீர்செல்வம், மகள் மகிபாலாநானி ஆகியோரது பெயர்களில் அசையும் சொத்துகள் ரூ. 2,52,08,542 மற்றும் அசையா சொத்தாக ரூ. 30,75,000 என மொத்தம் ரூ. 2,82,83,542 ( 2.82 கோடி) உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரிடம் 3 கார்கள், 5 டிப்பர் லாரிகள் உள்ளன. 506 கிராம் தங்க நகைகள் உள்ளன. ரூ.3.07 கோடி கடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கருப்பையா பெயரில் கறம்பக்குடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.

அ.ம.மு.க. வேட்பாளர் ப. செந்தில்நாதன்:

அ.ம.மு.க. வேட்பாளர் ப. செந்தில்நாதன், அவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் பவித்ரா, யாழினி ஆகியோர் பெயரில் அசையும் சொத்துகள் ரூ.88,31,187 அசையா சொத்துகள் ரூ.7.30 கோடி என மொத்தம் ரூ.8.18 கோடி சொத்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்களிடம் 1.100 கிலோ தங்கம் உள்ளது. ரூ.64.08 லட்சம் கடன் உள்ளது. 2 கார், ஒரு இரு சக்கர வாகனம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மீது திருச்சி கோட்டை, தில்லை நகர் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது.