Skip to main content

கும்பகோணம் தனி மாவட்டமாகப்போகிறதா?

Published on 09/07/2019 | Edited on 09/07/2019

 

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாகப்போகிறது என்கிற செய்தி சமூக வலைதளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. இது நடந்தால் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என குதுகலமாக கூறுகிறார்கள் அப்பகுதி மக்கள்.

k

 

புகழ்பெற்ற கோயில்களும், மிகப்பழமையான பாரம்பரியமும், வரலாற்றுப்பின்னணியும், விவசாயத்தையும், ஒருங்கே இயற்கையாக பெற்றுள்ள கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் உறுவாக்கித்தரவேண்டும் என 30 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. வர்த்தகர்களும், பொதுமக்களும், அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் பலமுறை ஒருங்கிணைந்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர். கும்பகோணம் எம்,எல்,ஏ அன்பழகன் சட்டமன்றத்தில் இதுகுறித்து கோரிக்கை வைத்தே வருகிறார்.

 

இந்த நிலையில் தனி மாவட்ட செய்தி உண்மையா, மாவட்ட அதிகாரிகள், அதிமுக பிரமுகர்கள் பலரிடமும் விசாரித்தோம், " கும்பகோணம் தனி மாவட்டமாகக்கூடிய அனைத்து தகுதிகளும் கொண்டுள்ளது. தலைநகரங்களில் இருக்கக்கூடிய அனைத்து தகுதிகளும், கும்பகோணத்தில் இருக்கிறது. தலைமை குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றம், தலைமை மருத்துவமனை, சிட்டி யூனியன் வங்கியின் தலைமை அலுவலகம், மாவட்ட கல்வித்துறை அலுவலகம், என அனைத்தும் கும்பகோணத்தில் இருக்கிறது.

 

 1866 முதல் நகராட்சி அந்தஸ்து பெற்று சிறப்பு நகராட்சியாக இன்றுவரை செயல்பட்டு வருகிறது. அதேபோல் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் இங்கிருந்து நாகை மாவட்டம் வரை தன்னுடைய சேவையை செய்து வருகிறது. தமிழகத்தில் உள்ள எட்டு போக்குவரத்து கோட்டங்களில் ஒன்று கும்பகோணத்தை தலைமையிடமாகக்கொண்டு செயல்படுகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் காவிரி டெல்டா மாவட்ட தலைமை அலுவலகமும் கும்பகோணத்தில் தான் உள்ளது. மாவட்ட தலைமையகத்துக்கு தேவையான பதிவாளர் அலுவலகம், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட அனைத்தும் கும்பகோணத்தில் இருக்கிறது.பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், வலங்கைமான் நீடாமங்கலம், ஆகிய வட்டங்களை இனைத்து தனிமாவட்டமாக்கினால் பெறும் பயன் உள்ளதாக அமையும்" . என்கிறார்கள்.

 

கும்பகோணம் சட்டமன்ற உறுப்பிலனர் க.அன்பழகனோ, " தனிமாவட்டம் என்கிற சாத்தியம் தற்போது இருப்பதாக தெரியவில்லை, அதற்கான முகாந்திரம் தற்போது தெரியவில்லை," என்கிறார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் கும்பகோணம் பகுதி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலுக்கு ஆளுநர் வருகை; பக்தர்கள் அவதி!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Governor's visit to Thiruphuvanam Kambakareswarar Temple; Devotees suffer

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (02.02.2024) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என். ரவி வருகையால் கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், தரிசனத்துக்கு தாமதமாவதாக பக்தர்கள் சரமாரியாக புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருப்பதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆளுநரின் தரிசனத்துக்குப் பின்னர்தான் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டதால் வெளியூர்களில் இருந்து வந்துள்ள பக்தர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.