Skip to main content

கன்னியாகுமாியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு கும்பாபிஷேகம்

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
t

 

கன்னியாகுமாியில் கட்டப்பட்ட திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

          கன்னியாகுமாியில் ராமகிருஷ்ணா மடத்துக்கு சொந்தமான விவேகானந்தா கேந்திராவில் கடற்கரையையொட்டி ஐந்தரை ஏக்கா்  நிலத்தில் 22 கோடி ருபாய் மதிப்பில் திருப்பதி வெங்கடாசலபதி கிளை கோவில் கட்டப்பட்டது. 

 

t

           

அந்த கோவில் கும்பாபிஷேகம்  மற்றும் திறப்பு விழா இன்று நடந்தது. இதற்கான யாகசாலை  பூஜைகள் கடந்த 5 நாட்களாக திருப்பதி கோவில் தலைமை அா்ச்சகா் சேஷாத்திாி தலைமை நடந்து வந்தது. நேற்று முன் தினம் மாலை மூலஸ்தான கருவறையில் 7 1/2 அடி  வெங்கடாசலபதி சிலையும், கோவிலில் 3 அடி உயர பத்மாவதி தாயாா் சிலையும், 3 அடி உயர ஆண்டாள் சிலையும், 3 அடி உயர கருட பகவான் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.   

 

t

           

 இந்த நிலையில் இன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதையொட்டி ஏராளமான போலிசாா் பாதுகாப்புகாக குவிக்கப்பட்டியிருந்தனா். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கதிகலங்க வைக்கும் ஜட்டி திருடர்கள்; பயத்தில் உறைந்த மக்கள்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023
Infuriating Jatti Thieves; People frozen in fear

 

பல விதமான நூதன முறைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க சிசிடிவி காட்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பிடிபட்டால் சிக்காமல் இருக்க உடலில் எண்ணெய்யை பூசிக்கொண்டு சில மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அண்மையில் மதுரையில் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

 

இந்நிலையில் ஆந்திராவில் திருப்பதி பகுதியில் ஜட்டியுடன் உலாவும் சில மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜட்டி அணிந்தபடி உலாவும் சில நபர்கள் திருட்டில் ஈடுபடுவதாக போலீசருக்கு பல இடங்களில் இருந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்ததில், ஜட்டியுடன் சில நபர்கள் தங்கள் உடலில் டார்ச் லைட்டை  மாட்டியபடி நோட்டமிடுவது தெரியவந்தது.

 

அண்மையில் கார் ஷோரூமில் இந்த ஜட்டி திருட்டு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜட்டியுடன் சுற்றித் திரியும் அந்த நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு இருப்பதால் அடையாளம் காண்பது போலீசாருக்கு சிரமத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக திருப்பதியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளைக் குறிவைத்து இவர்கள் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

ஆயுதபூஜை எதிரொலி; பூக்கள் விலை கடும் உயர்வு

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Ayudapuja Echo; The price of flowers has skyrocketed

 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை காரணமாக மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

 

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வடைந்துள்ளது. குமரி தோவாளை பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு மலர் சந்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் ராயக்கோட்டை, மதுரை, ஓசூர், திண்டுக்கல் என பல்வேறு வெளியூர் பகுதிகளில் இருந்தும், ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை உள்ளிட்ட உள்ளூர்ப் பகுதிகளில் இருந்தும் சுமார் 200 டன் பூக்கள் இந்த சிறப்பு மலர் சந்தைக்கு வந்துள்ளது.

 

ஒரு கிலோ பிச்சிப்பூ 800 ரூபாயில் இருந்து 1100 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ கிலோ 1,000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்கும், ரோஜா பூ ரூபாய் 250 லிருந்து 300 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.