Skip to main content

‘புரெவி’ புயலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் குமரி...

Published on 03/12/2020 | Edited on 03/12/2020

 

Kumari ready to face 'Purevi' storm ..

 

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி ‘புரெவி’ புயலாக மாறி, நாளை தென் தமிழகத்தில், கன்னியாகுமரிக்கும் பாம்பனுக்கும் இடையை கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.

 

இதனால் தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய இடி மின்னலுக்கு வாய்ப்புள்ளதாகக் கூறி ‘ரெட்’ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதில் குமரி மாவட்டமும் புயலால் பாதிப்புக்குள்ளாகும் என்பதால், அதை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. 


இதற்காக, ஆழ்கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு, கப்பல் படை மற்றும் கடலோரக் காவல்படை மூலமாக அறிவுறுத்தப்பட்டு, அந்த மீனவர்கள் கர்நாடக, மராட்டியம், கேரளா மற்றும் லட்சத் தீவுகளில் உள்ள துறைமுகங்களில் கரைசேர்ந்துள்ளனர். மேலும், குமரி மாவட்டத்தில் 20 பேர் கொண்ட 3 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் வந்துள்ளனர். இதேபோல் மாநிலப் பேரிடா் மேலாண்மை மீட்புப் படையைச் சேர்ந்த 80 பேர் வந்துள்ளனர். மேலும், குமரி மாவட்ட பேரிடர் மீட்புப் பயிற்சி பெற்ற, 50 பேர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த 30 பேரும் தயார் நிலையில் உள்ளனர்.


புரெவி புயல் மீட்புப் பணியில் ஈடுபட, தேசிய மாநிலப் பேரிடர் மீட்புப் பணியினர் 220 பேரும், 1,300 போலீசாரும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்புத் துறை சார்பில் 13 குழுவினரும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்களும் மீட்புப் பணியில் தயாராக உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள 48 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கப் போவது தடுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் வள்ளம், படகு, கட்டுமரங்கள் மேட்டுப் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடற்கரை சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றி, 24 மணி நேரமும் மீட்புக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல்களும், கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

 

Kumari ready to face 'Purevi' storm ..


மேலும், சின்னமுட்டம், குளச்சல், முட்டம், தேங்காப்பட்டணம் துறைமுகளில் மீன் பிடித்து ஏலம் போடாததால் மீனவர்கள் நடமாட்டம் இன்றி அந்தப் பகுதிகள் வெறிச்சோடி கிடக்கிறது. இங்கு ஒலி பெருக்கிகள் மூலம் புயல் எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. அதேபோல் கரைப் பகுதி, மழை வெள்ளம் புகாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 அணைகளில் தண்ணீரை வெளியேற்றி அதன் கொள்ளளவு குறைக்கபட்டுள்ளது.
 

பாதுகாப்பு சம்மந்தமாக குமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா, ஆட்சியர் அரவிந்த், காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் மேற்பார்வையில் எடுக்கபட்டுள்ள நடவடிக்கைகளை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோர் இன்று (புதன்) ஆய்வு செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கன்னியாகுமரியில் அமித்ஷா ரோடு ஷோ!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Amitsha Road Show in Kanyakumari

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதன்படி திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இரண்டு நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்துள்ளார். இந்த பயணத்தின் போது பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்படி இன்று (13.04.2024) கன்னியாகுமரியில் பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணனையும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கான வேட்பாளர் நந்தினியையும் ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார். தக்கலை பேருந்து நிலையத்தின் சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து காவல் நிலையம் வழியாக சென்று மேச்சகிரை பகுதியில் நிறைவடைந்தது. இந்த ரோடு ஷோவின் போது அமித்ஷா கையில் தாமரை சின்னத்தை கையில் ஏந்தியவாறு வாகன பேரணியில் ஈடுபட்டார்.

இது குறித்து அமித்ஷா தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கன்னியாகுமரி சாலைப் பேரணியில் பா.ஜ.கவுக்கு கிடைத்த அமோக ஆதரவு, பிரதமர் .நரேந்திர மோடி மீது தமிழக மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் உலக அரங்கில் உயர்த்தியவர் பிரதமர் மோடி மட்டுமே. கன்னியாகுமரி (தமிழ்நாடு) மக்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'நல்லா சாப்பிடுங்க' -உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
  the candidate who gathered votes by feeding them food

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஏற்கனவே கோடைக்கால வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் தேர்தல் பரப்புரைகள் இன்னும் அனலைக் கூட்டியுள்ளது. பல இடங்களில் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரம் நூதனமான முறையில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வுகளும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது. டீக்கடையில் டீ ஆற்றுவது, பரோட்டா சுடுவது, துணித் துவைப்பது போன்ற நூதன முறைகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற வேட்பாளர் ஒருவர் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவை ஊட்டி விட்டு வாக்கு சேகரித்த நிகழ்வு நடந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரியின் விளவங்கோடு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளரான ராணி, உணவகம் ஒன்றில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு உணவு பரிமாறியதோடு உணவை ஊட்டி விட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேட்பாளரின் இந்த நடவடிக்கை, அந்தப் பகுதி வாக்களர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.