Skip to main content

வசந்தகுமார் எம்.பி. மறைவுக்கு குமரி எம்.எல்.ஏ.-க்கள் இரங்கல்...

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

vasanthakumar

 

 

கன்னியாகுமாி பாராளுமன்ற தொகுதி எம்.பி. வசந்தகுமார் (காங்கிரஸ்) கரோனா ஊரடங்கு நேரத்தில் பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று நிவாரண பொருட்களை வழங்கி வந்தாா். இந்த நிலையில் கடந்த 10-ம் தேதி அவரை கரோனா தொற்று தாக்கி அதிலிருந்து மீண்டு கொண்டிருந்த நிலையில், சென்னை மருத்துவமனையில் நேற்று (28-ம் தேதி) மாலை இறந்தாா். அவருக்கு ஜனாதிபதி, பிரதமர், தமிழக ஆளுநர், முதல்வர், எதிா்கட்சி தலைவர் உட்பட அரசியல் பிரபலங்கள், திரைப்படத் துறையினா், வா்த்தக அதிபா்கள் என பல தரப்பினர் இரங்கல் தொிவித்துள்ளனர்.

 

இந்த நிலையில் குமாி மாவட்டத்தில் வசந்தகுமாரோடு இணைந்து மக்கள் பணியாற்றிய மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ. க்களும்  இரங்கல் தொிவித்துள்ளனா். இதில் திமுக எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன், “தொகுதியின் வளா்ச்சிக்காக இரவு பகலாக உழைத்தவர். யாா் உதவி கேட்டு சென்றாலும் மனமகிழ்சியுடன் உதவக்கூடியவர். கட்சி பாகுபாடியின்றி எல்லோாிடமும் அன்பாக பழகக்கூடியவர்” என்று கூறியுள்ளார். 

 

திமுக மனோ தங்கராஜ், “நம்பி வருவோரை வெறும் கையுடன் அனுப்பாத அரசியல் நாகரிகமுடைய ஒரு அரசியல் தலைவரை குமாி மாவட்டமும் தமிழகமும் இழந்து விட்டது” என்றார்.

 

காங்கிரஸ் ராஜேஷ்குமார், “நேரு குடும்பத்தாராலும், காமராஜராலும் ஈா்க்கபட்டவர். காமராஜர் மீது மிகுந்த பற்று கொண்டவர். கரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நோில் சென்று நிவாரண உதவிகளை வாரி வழங்கியவர்” என்றுள்ளார்.

 

காங்கிரஸ் பிரின்ஸ், “குமரி மாவட்டத்தின் வளா்ச்சிக்கு வித்திட்டு அந்த பணிகளுக்காக அவா் உழைத்து வந்த நிலையில் நம்மை விட்டு பிாிந்து சென்று விட்டார்” என்றார். 

 

காங்கிரஸ் விஜயதரணி, “காங்கிரஸின் மிக பொிய தூணாக இருந்து மக்கள் மத்தியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து அவருடைய பணிகளை நினைவு கூரும் நேரத்தில் அவரை இழந்து விட்டோம் என்றார்.

 

மேலும் கேரளா எதிா்கட்சி தலைவர் காங்கிரஸ் ரமேஷ் சென்னிதலா, காங்கிரஸ் தலைவா்களில் ஒருவரான வசந்தகுமார் என்னிடம் மிகுந்த அன்போடும், நெருக்கமாகவும் இருந்தவா். அவரின் இந்த திடீா் மறைவு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். இதுபோக மேலும் முன்னாள் மத்திய அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், மேல்சபை எம்பி விஜயகுமாா் ஆகியோரும் இரங்கல் தொிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.