Skip to main content

லட்சத்தீவில் அனுமதியின்றி மீன்பிடித்த குமரி, கேரளா மீனவர்கள் சிறைபிடிப்பு!

Published on 05/09/2019 | Edited on 05/09/2019

தமிழகத்தில் இருந்து கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை நாடுகளால் தாக்கப்படுவதும், படகுகளை உடைப்பதோடு, மீனவர்களை சிறைபிடிக்கப்படுவது தொடர்கதையாகியுள்ளது. இது மட்டுமில்லாமல் கனரக கப்பல்களால் மீனவர்களின் படகுகள் மீது மோதி அவர்களின் படகை சேதப்படுத்துகின்றனர். இதேபோல் பல்வேறு இன்னல்களுக்கு மீனவர்கள் தொடர்ந்து ஆளாகி வருகிறார்கள்.

 Kumari, Kerala fishermen caught captive in Lakshadweep


இந்த நிலையில் குமரி மாவட்டம் இரவிபுத்தன் துறையில் இருந்து ஆன்றோ என்பவர் கடந்த 10-ம் தேதி தனது விசைப்படகில் லட்சத்தீவில் மீன் பிடிக்க குமரி மீனவர்கள் கில்பின் (23), சுஜி (29), ராஜீ (59), ஜான் (57) மற்றும் கேரளா மீனவர்கள் மூன்கு பேர் என 8 பேருடன் மீன் பிடிக்க சென்றார்.

இவர்கள் மீன் பிடித்து கொண்டு இருந்த போது அவர்களின் படகு திடீரென்று பழுதாகியுள்ளது. பின்னர் அங்கு வந்த மற்றொரு விசைப்படகு மூலம் 8 மீனவர்களும் அகத்தி என்ற பகுதியில் கரை சேர்ந்தனர். இந்த நிலையில் அங்கு வந்த மீன் வளத்துறை அதிகாரிகள் அந்த மீனவர்களின் படகை சோதனை செய்த போது அவர்கள் லட்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்கான எந்த வித அனுமதியையும் பெறவில்லை என்பது தெரியவந்தது. 
 

இதனையடுத்து அதிகாரிகள் அந்த 8 மீனவர்களையும் கடந்த 2 வாரமாக சிறைபிடித்து வைத்துள்ளனர். மேலும் அவர்களை கடுமையான முறையில் விசாரித்தும் வருகின்றனர். அவர்களுடைய உறவினர்கள் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். இந்த மீனவர்களை சிறையில் அடைப்பதற்கு முன் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து மீனவர்களை மீட்க வேண்டும் என்று தெற்காசிய மீனவர் தோழமை கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பாதிரியர் சர்ச்சில் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.