ku

தென்கோடியில் இருக்கும் கன்னியாகுமாி நாட்டின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஓன்றாக கருதப்படுகிறது. இங்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகிறாா்கள். இது போக காா்த்திகை மாா்கழி மாதங்களில் லட்சத்துக்கு மேற்பட்ட ஐயப்பா சாமி பக்தா்களும் வருகிறாா்கள்.

இதனால் குமாி சுற்றுலாத்துறைக்கும் பேருராட்சி நிா்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதி என்பது கேள்வி குறியாக உள்ளது. கடற்கரையின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு சற்று உட்காா்ந்து ஓய்வு எடுக்கவும் உட்காா்ந்து கடற்கரை அழகை ரசிக்கவும் சிமென்ட் பெஞ்ச், மேலும் அந்த பகுதிகளில் குடிநீா் வசதி மேலும் கழிப்பறைகள் எதுவும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அல்லல் படுகின்றனா்.

Advertisment

அதே போல் இங்குள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜிகளில் உள்ள கழிவுகளை கடற்கரை பகுதியில் கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதோடு கடலில் அந்த கழிவுகள் கலந்து மிதந்து கிடப்பதால் சுற்றுலா பயணிகள் அந்த கடலில் குளிப்பதற்கு அஞ்சுகின்றனா்.

இதற்கு குமாி சுற்றுலாத்துறையும் பேருராட்சி நிா்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisment

இதே போல் புத்தளம் பேருராட்சிக்குட்ட சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறாா்கள். இங்கு கடற்கரையொட்டி குழந்தைகள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்ட சிறுவா் பூங்காக்கள் உடைந்து மண் மூடி கிடக்கிறது. இதே போல் உட்காருவதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் உடைந்து கிடக்கிறது.

இதே போல் முட்டம் பேருராட்சிக்குட்பட்ட முட்டம் கடற்கரை பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் திரைப்படம் மூலம் பிரபலமானது. தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து குமாி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வந்தாலும் முட்டத்துக்கு செல்வது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மாலை 6 மணிக்கே காவல்துறையினா் துரத்தி விடுகிறாா்கள்.

இது குறித்து காவல்துறையினா் கூறும் போது நாள் தோறும் மாலை நேரத்தில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகிறாா்கள். இங்கு மின் வசதிகள் இல்லாததால் தான் இருள் சூழ்வதற்கு முன் சுற்றுலா பயணிகளை கரைக்கு அனுப்புகிறோம். மேலும் சுற்றுலா பயணிகள் ஒய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டுள்ள விடுதிகள் பராமாிப்பின்றி சிதிலமடைந்துள்ளது.

அதே போல் கழிவறைகள் ஓன்று கூட இல்லாததால் அவசரத்துக்கு பெண்கள் பாறை இடுக்குகளில் மறைந்தால் அதை சமூக விரோதிகள் மறைந்து இருந்து பாா்பதும் படம் புடிக்கவும் செய்கின்றனா்.

இந்த மாதிாி சூழ்நிலையால் தான் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவஸ்தையும் அச்சமும் அடைகிறாா்கள் என்றனா்.

இதற்கு மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்குமா?