Skip to main content

 குமரி கடற்கரை சுற்றுலா ஸ்தலங்களில் பரிதவிக்கும் சுற்றுலா பயணிகள்!

Published on 04/08/2018 | Edited on 04/08/2018
ku

           

தென்கோடியில் இருக்கும்  கன்னியாகுமாி நாட்டின் முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் ஓன்றாக கருதப்படுகிறது. இங்கு உலகின் பல நாடுகளில் இருந்தும் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு ஆண்டுதோறும் 20 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகிறாா்கள். இது போக காா்த்திகை மாா்கழி  மாதங்களில் லட்சத்துக்கு மேற்பட்ட ஐயப்பா சாமி பக்தா்களும் வருகிறாா்கள். 


              இதனால் குமாி சுற்றுலாத்துறைக்கும் பேருராட்சி நிா்வாகத்துக்கும் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதி என்பது கேள்வி குறியாக உள்ளது. கடற்கரையின் அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு சற்று உட்காா்ந்து ஓய்வு எடுக்கவும் உட்காா்ந்து கடற்கரை அழகை ரசிக்கவும் சிமென்ட் பெஞ்ச், மேலும் அந்த பகுதிகளில் குடிநீா் வசதி மேலும் கழிப்பறைகள் எதுவும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அல்லல் படுகின்றனா். 


            அதே போல் இங்குள்ள ஓட்டல்கள் மற்றும் லாட்ஜிகளில் உள்ள கழிவுகளை கடற்கரை பகுதியில் கொட்டுவதால் துா்நாற்றம் வீசுவதோடு கடலில் அந்த கழிவுகள் கலந்து மிதந்து கிடப்பதால் சுற்றுலா பயணிகள் அந்த கடலில்  குளிப்பதற்கு அஞ்சுகின்றனா். 
           இதற்கு குமாி சுற்றுலாத்துறையும் பேருராட்சி நிா்வாகமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


             இதே போல் புத்தளம் பேருராட்சிக்குட்ட சொத்தவிளை மற்றும் சங்குத்துறை கடற்கரைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா  பயணிகள் வருகிறாா்கள். இங்கு கடற்கரையொட்டி குழந்தைகள் விளையாடுவதற்கு அமைக்கப்பட்ட சிறுவா் பூங்காக்கள் உடைந்து மண் மூடி கிடக்கிறது. இதே போல் உட்காருவதற்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் உடைந்து கிடக்கிறது. 
           

 இதே போல் முட்டம் பேருராட்சிக்குட்பட்ட முட்டம் கடற்கரை பாரதிராஜாவின் கடலோர கவிதைகள் திரைப்படம் மூலம் பிரபலமானது. தமிழகத்தின் எந்த பகுதியில் இருந்து குமாி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள்  வந்தாலும் முட்டத்துக்கு செல்வது வழக்கம். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மாலை 6 மணிக்கே காவல்துறையினா் துரத்தி விடுகிறாா்கள். 
         

  இது குறித்து காவல்துறையினா் கூறும் போது நாள் தோறும் மாலை நேரத்தில்  அதிகமான சுற்றுலா பயணிகள்  வருகிறாா்கள். இங்கு மின் வசதிகள் இல்லாததால் தான் இருள் சூழ்வதற்கு முன் சுற்றுலா பயணிகளை கரைக்கு அனுப்புகிறோம். மேலும் சுற்றுலா பயணிகள் ஒய்வு எடுப்பதற்காக கட்டப்பட்டுள்ள விடுதிகள் பராமாிப்பின்றி சிதிலமடைந்துள்ளது. 
           அதே போல் கழிவறைகள் ஓன்று கூட இல்லாததால் அவசரத்துக்கு பெண்கள் பாறை இடுக்குகளில் மறைந்தால் அதை சமூக விரோதிகள் மறைந்து இருந்து பாா்பதும் படம் புடிக்கவும் செய்கின்றனா். 


                இந்த மாதிாி சூழ்நிலையால் தான் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவஸ்தையும் அச்சமும் அடைகிறாா்கள் என்றனா். 
             இதற்கு மாவட்ட நிா்வாகம்  நடவடிக்கை எடுக்குமா?
                                  

சார்ந்த செய்திகள்

Next Story

“எங்களை காப்பாற்றுங்கள்” - ரஷ்ய ராணுவத்தால் கதறும் இந்தியர்கள்

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
 Indian tourists shouts Save us from Russia

உக்ரைன் - ரஷ்யா இடையே, கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக போர் சூழ்நிலை உருவாகி நீடித்து வரும் நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் உக்ரைன் எல்லையில் சிக்கியிருப்பதாக அவர்கள் வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், 7 இந்தியர்கள் ரஷ்ய ராணுவ உடைகள் அணிந்து பேசியதாவது, “கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரஷ்யாவிற்கு சுற்றுலா பயணிகளாக வந்தோம். வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு உதவிய ஒரு ஏஜெண்டை நாங்கள் சந்தித்தோம். அதன் பின்னர், அந்த ஏஜெண்ட் எங்களை பெலாரஸுக்கு அழைத்துச் செல்ல முன்வந்தார். ஆனால், அங்கு விசாவுடன் தான் செல்ல வேண்டுமென்று எங்களுக்கு தெரியாது. 

அதன் பின், நாங்கள் பெலாரஸுக்குச் சென்றோம். அங்கு நாங்கள் அவருக்கு பணம் கொடுத்தோம். ஆனால், அவர் அதிக பணம் கேட்டார். எங்களிடம், அவர் கேட்ட பணம் இல்லாததால் எங்களை நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். அதன் பின்னர், அங்கு வந்த போலீசார், எங்களை பிடித்து ரஷ்ய ராணுவத்திடம் ஒப்படைத்துவிட்டனர். ரஷ்ய இராணுவம் எங்களை தெரியாத இடத்தில் மூன்று, நான்கு நாட்கள் அடைத்து வைத்தது. பின்னர் உதவியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் சமையல்காரர்களாக பணிபுரிய எங்களை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வற்புறுத்தினார்கள். ஒருவேளை கையெழுத்து போடவில்லையென்றால், எங்களை 10 ஆண்டுகள் சிறையில் அடைத்து விடுவோம் என அவர்கள் மிரட்டினார்கள். 

அந்த ஒப்பந்தம், அவர்களின் மொழியில் இருந்ததால், அது எங்களுக்கு புரியவில்லை. ஆனால், நாங்கள் அதில் கையெழுத்திட்டோம். அதன் பிறகு, அவர்கள் எங்களை ராணுவப் பயிற்சி மையத்தில் சேர்த்தனர். பின்னர் தான், நாங்கள் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. அவர்கள் எங்களை ராணுவத்தில் சேர்த்து பயிற்சி கொடுத்தனர். 

ஒரு வருடத்திற்குப் பிறகுதான் நாங்கள் வெளியேற முடியும் என்று ரஷ்ய இராணுவம் எங்களிடம் கூறுகிறது. உக்ரைன் எல்லையில் எங்களை இறக்கிவிட்டு துப்பாக்கியுடன் முன்னேறிச் செல்லுங்கள் என்று உத்தரவிட்டனர். அவர்கள், இந்த போரில், வெற்றிபெற உதவுமாறு எங்களைக் கேட்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராகவில்லை. அவர்களுக்கு எப்படி உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதில், நாங்கள் பிழைக்காமல் கூட போகலாம். இது எங்கள் கடைசி வீடியோவாக இருக்கலாம். அதனால், எங்களை காப்பாற்றுங்கள்” என்று தெரிவித்தனர். 

இதனிடையே, ரஷ்யா சார்பில் உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுத்தப்பட்ட இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது அஸ்பன் என தெரியவந்துள்ளது. மேலும், அந்த 7 பேர் யார் என்பது குறித்த விசாரணையில், ககான்தீப் சிங் (24), லவ்பீரித் சிங் (24), நரேன் சிங் (22), குர்பீரித் சிங் (21), குர்பீர்த் சிங் (23), ஹர்ஸ் குமார் (20), அபிஷேக் குமார் (21) எனத் தெரியவந்தது. இதனையடுத்து, அந்த 7 இந்தியர்களை மீட்க அனைத்து முயற்சிகளையும் இந்திய அரசு செய்யும் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Next Story

மலைப்பாதையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்து விபத்து; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
Tourist vehicle overturns on mountain road More than 10 people injured

வார விடுமுறை தினத்தை முன்னிட்டு சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள திருநீர்மலை பகுதியைச் சேர்ந்த 19 பேர் நேற்று மினி பேருந்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதனையடுத்து ஏற்காட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்துவிட்டு ஏற்காட்டில் இருந்து சென்னை திரும்புவதற்காக இன்று மதியம் புறப்பட்டுள்ளனர். இந்த பேருந்தில் ஓட்டுநருடன் சேர்த்து மொத்தம் 20 பேர் பயணித்துள்ளனர்.

இந்நிலையில் ஏற்காடு மலையடிவாரத்தின் முதலாவது கொண்டை ஊசி வளைவு அருகே மினி பேருந்து வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரை உடைத்து அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி மினி பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அப்போது அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் விபத்தில்  சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து சம்பவத்தால் ஏற்காடு மலையடிவாரத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.