Advertisment

சகோதரியின் பிரசவத்திற்காக சென்ற கல்லூரி மாணவி கர்ப்பம்! காதலன்  கைது

குமரி மாவட்டம் குழித்துறையில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட காதலின் வினையால் கற்பை இழந்து நிற்கிறாள்.

Advertisment

a

திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரியை பார்ப்பதற்காக கல்லூரி மாணவி சென்றாள். அங்கு அதே மருத்துவ மனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டிருந்த சகோதரியை பார்ப்பதற்காக கொல்லம் இடவஞ்சேரியை சேர்ந்த அனீஸ் வந்தியிருந்தார்.

இந்தநிலையில் ஒரே நேரத்தில் இருவருடைய சகோதரிக்கும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் உறவினர்களின் கையில் குழந்தையை கொடுப்பதற்காக நர்ஸ் உறவினர்கள் இரண்டு பேரை உள்ளே அழைத்தார். அப்போது உள்ளே சென்ற அந்த கல்லூரி மாணவி மற்றும் அனிஸிடம் நர்ஸ் குழந்தையை கொடுக்கும் போது தவறுதலாக அனிஸ் சகோதரி குழந்தையை கல்லூரி மாணவியிடமும் கல்லூரி மாணவியின் சகோதரி குழந்தையை அனிஸிடமும் மாற்றி கொடுத்து விட்டார். உடனே தவறை புரிந்து கொண்டு சுதாகரித்த நர்ஸ் இருவரிடமும் குழந்தையை மாற்றிக் கொள்ளுங்கள் என கூறினாள்.

Advertisment

அப்போது மாறி மாறி சிரித்து கொண்ட இருவருக்குமிடையை ஏற்பட்ட அந்த சிரிப்பு கொஞ்ச நேரத்திலே காதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் செல்போனில் நாள் முமுக்க மணிக்கணக்கில் பேசி தங்களின் காதலை வளர்த்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கொல்லத்தில் இருந்து கல்லூரி மாணவிக்கு போன் செய்த அனிஸ் அவளிடம் திருவனந்தபுரத்துக்கு வருமாறும் அங்கு வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனிஸ் கூறியுள்ளார்.

அதை நம்பி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்லி விட்டு திருவனந்தபுரம் சென்ற மாணவியை அனிஸ் ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியியல் பலாத்காரம் செய்துள்ளான். அதன்பிறகு அங்கிருந்து பாலக்காடு மற்றும் கோவைக்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் பலாத்காரம் செய்துள்ளான். இதற்கிடையில் கல்லூரி சென்ற மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் களியக்காவிளை போலிசில் புகார் கொடுத்தனர்.

கன்னியாகுமரியில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருவரும் நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் மாணவியை குழித்துறையில் விட்டுவிட்டு அனிஸ் கேரளாவுக்கு தப்பி சென்று தலைமறைவானான். அதன்பிறகு வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தனக்கு நடந்ததை கூறி மாணவி கதறினாள். குழித்துறை மகளிர் போலிசில் புகார் கொடுக்கப்பட்டது.

அனிஸை தேடி கேரளா சென்ற போலிசார் அவனை கைது செய்து விசாரித்த போது அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. மேலும் கல்லூரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கூறவும் இல்லை அவள் அந்த மாதிரி தவறான ஆசைக்கு தான் என்னிடம் பழகினாள் என்று அவன் கூறியுள்ளான்.

இது காதலா அல்லது காமமா என்று போலீசுக்கு தலை சுற்ற வைத்திருக்கிறது.

Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe