Skip to main content

சகோதரியின் பிரசவத்திற்காக சென்ற கல்லூரி மாணவி கர்ப்பம்! காதலன்  கைது

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

 குமரி மாவட்டம் குழித்துறையில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மருத்துவமனைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு ஏற்பட்ட காதலின் வினையால் கற்பை இழந்து நிற்கிறாள்.

 

a

   

திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரியை பார்ப்பதற்காக கல்லூரி மாணவி சென்றாள். அங்கு அதே மருத்துவ மனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்டிருந்த சகோதரியை பார்ப்பதற்காக கொல்லம் இடவஞ்சேரியை சேர்ந்த அனீஸ் வந்தியிருந்தார்.

 

    இந்தநிலையில் ஒரே நேரத்தில் இருவருடைய சகோதரிக்கும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் உறவினர்களின் கையில் குழந்தையை கொடுப்பதற்காக நர்ஸ் உறவினர்கள் இரண்டு பேரை உள்ளே அழைத்தார். அப்போது உள்ளே சென்ற அந்த கல்லூரி மாணவி மற்றும் அனிஸிடம் நர்ஸ் குழந்தையை கொடுக்கும் போது தவறுதலாக அனிஸ் சகோதரி குழந்தையை கல்லூரி மாணவியிடமும் கல்லூரி மாணவியின் சகோதரி குழந்தையை அனிஸிடமும் மாற்றி கொடுத்து விட்டார். உடனே தவறை புரிந்து கொண்டு சுதாகரித்த நர்ஸ் இருவரிடமும் குழந்தையை மாற்றிக் கொள்ளுங்கள் என கூறினாள்.

 

     அப்போது மாறி மாறி சிரித்து கொண்ட இருவருக்குமிடையை ஏற்பட்ட அந்த சிரிப்பு கொஞ்ச நேரத்திலே காதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் செல்போனில் நாள் முமுக்க மணிக்கணக்கில் பேசி தங்களின் காதலை வளர்த்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கொல்லத்தில் இருந்து கல்லூரி மாணவிக்கு போன் செய்த அனிஸ் அவளிடம் திருவனந்தபுரத்துக்கு வருமாறும் அங்கு வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என்று அனிஸ் கூறியுள்ளார்.

 

     அதை நம்பி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்லி விட்டு திருவனந்தபுரம் சென்ற மாணவியை அனிஸ் ஓட்டலுக்கு அழைத்து சென்று பாலியியல் பலாத்காரம் செய்துள்ளான். அதன்பிறகு அங்கிருந்து பாலக்காடு மற்றும் கோவைக்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் பலாத்காரம் செய்துள்ளான். இதற்கிடையில் கல்லூரி சென்ற மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் களியக்காவிளை போலிசில் புகார் கொடுத்தனர்.

 

     கன்னியாகுமரியில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருவரும் நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் மாணவியை குழித்துறையில் விட்டுவிட்டு அனிஸ் கேரளாவுக்கு தப்பி சென்று தலைமறைவானான். அதன்பிறகு  வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தனக்கு நடந்ததை கூறி மாணவி கதறினாள்.  குழித்துறை மகளிர் போலிசில் புகார் கொடுக்கப்பட்டது. 


  அனிஸை தேடி கேரளா சென்ற போலிசார் அவனை கைது செய்து விசாரித்த போது அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. மேலும் கல்லூரி மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்று கூறவும் இல்லை அவள் அந்த மாதிரி தவறான ஆசைக்கு தான் என்னிடம் பழகினாள் என்று அவன் கூறியுள்ளான்.


       இது காதலா அல்லது காமமா என்று போலீசுக்கு தலை சுற்ற வைத்திருக்கிறது.
                             
 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.