Skip to main content

கஞ்சா போதையில் பொதுமக்களை மிரட்டும் இளைஞா்கள்

Published on 25/07/2019 | Edited on 25/07/2019


        கல்வியறிவு பெற்ற குமாி மாவட்டத்தில் தரமான கல்வி கிடைக்கிறதோ இல்லையோ ஆனால் தரமான கஞ்சா தங்கு தடையின்றி எல்லாம் பகுதிகளிலும் கிடைக்கிறது. இதனால் சீரழிந்து கொண்டியிருக்கிறாா்கள் குமாி பள்ளி கல்லூாி மாணவா்களும் இளைஞா்களும்.

 

k


               போதை பொருள் கும்பல் போலிசுக்கு மாமூல் கொடுத்து விட்டு மாணவா்களுக்கு சப்ளை செய்கின்றனா். மாணவா்கள் சா்வ சாதாரணமாக வகுப்பறைக்குள் கொண்டு பயன்படுத்தி போதையில் இருக்கிறாா்கள். இதே போல் கஞ்சாவுக்கு அடிமையாகும்  இளைஞா்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்ததும் விதமாக பல அசம்பாவித சம்பவங்களிலும் ஈடுபடுகின்றனா். 


         இதில் நாகா்கோவில் வடசோி பஸ்நிலையம் அருகில் பெண்கள் மூன்று பெண்கள் பஸ்சுக்காக காத்தியிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த கிறிஸ்து நகரை சோ்ந்த ஆன்றனி, டாட்ஜின் உட்பட 3 போ் ஃபுல் போதையில் அந்த பெண்களிடம் ஆபாசமாக நடந்து கொண்டதுடன் அவா்களிடம் சில்மிஷத்திலும் ஈடுபட்டனா்.


            அப்போது அங்கு வந்த போலீஸ் ஒருத்தரையும் தாக்க முயற்சித்தனா். இதையறிந்து அங்கு வந்த கூடுதல் போலிசாா் கஞ்சா ஆசாமிகளில் ஆன்றனி, டாட்ஜின் இருவரையும் கைது செய்தனா் ஓருவன் தப்பி ஓடினான். சமீபத்தில் நாகா்கோவிலில் நடந்த இரட்டை கொலையில்  தொடா்புடைய கொலையாளிகளில் கூட கஞ்சாவுக்கு அடிமையானவா்கள் தான். 


             மாமூலுக்காக கஞ்சா வியாபாாிகளை போலிசாா் கண்டு கொள்ளவே இல்லை இதனால் கஞ்சா அடிப்பவா்கள் நாளுக்கு நாள் அதிகாித்து வருகின்றனா்.
  
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆயுதபூஜை எதிரொலி; பூக்கள் விலை கடும் உயர்வு

Published on 22/10/2023 | Edited on 22/10/2023

 

Ayudapuja Echo; The price of flowers has skyrocketed

 

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை காரணமாக மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்து காணப்படுகிறது.

 

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வடைந்துள்ளது. குமரி தோவாளை பகுதியில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு மலர் சந்தை நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாட்டின் ராயக்கோட்டை, மதுரை, ஓசூர், திண்டுக்கல் என பல்வேறு வெளியூர் பகுதிகளில் இருந்தும், ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை உள்ளிட்ட உள்ளூர்ப் பகுதிகளில் இருந்தும் சுமார் 200 டன் பூக்கள் இந்த சிறப்பு மலர் சந்தைக்கு வந்துள்ளது.

 

ஒரு கிலோ பிச்சிப்பூ 800 ரூபாயில் இருந்து 1100 ரூபாய்க்கும், மல்லிகைப்பூ கிலோ 1,000 ரூபாயிலிருந்து 1500 ரூபாய்க்கும், ரோஜா பூ ரூபாய் 250 லிருந்து 300 ரூபாய்க்கும், அரளிப்பூ 400 ரூபாயில் இருந்து 500 ரூபாய்க்கும், சம்பங்கி 350 ரூபாயிலிருந்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. பல்வேறு பகுதிகளிலிருந்து மொத்த மற்றும் சில்லறை வியாபாரிகள் பூக்களை வாங்கிச் சென்று வருகின்றனர்.

 

 

Next Story

குமரியில் தொடங்கிய சிவாலய ஓட்டம்; ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

 Shivalaya run started in Kumari; devotees gathered in thousands

 

நாடு முழுவதும் கொண்டாடப்படும் சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்களில் பக்தர்கள் சிவாலய ஓட்டம் ஓடுவது மிகவும் பிரசித்தமானதாகும். 18-ம் நூற்றாண்டிலிருந்தே சிவாலய ஓட்டம் நடைபெற்று வருவது முக்கியத்துவமானதாகும். சிவாலயம் ஓடும் பக்தர்கள் விரதம் இருந்து இன்று (18-ம்தேதி) ஓட்டத்தை துவங்கினார்கள். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலிலிருந்து தொடங்கிய சிவாலய ஓட்டம் திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு மகாதேவர் கோவில், திருநந்திகரை திருநந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிபாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்ட சாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்பர் மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருபன்றிக்கோடு மகாதேவர் கோவில், திருநட்டாலம் சங்கரநாராயணன் கோவிலில் முடிவடையும்.

 

சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடைபெறும் இந்த சிவாலய ஓட்டம் 108 கி.மீ தூரம் கொண்டது. கேரளா மற்றும் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கால்நடையாக நடந்தும் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோ, கார், வேன் போன்ற வாகனங்களிலும் சென்று 12 கோவில்களையும் தரிசிக்கின்றனர். காவி வேட்டி, காவித் துண்டு அணிந்து கொண்டு கையில் விசிறி, திருநீருடன் கால்நடையாக நடந்து செல்லும் பக்தர்கள் விண்ணை முட்டும் அளவுக்கு பக்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனர். சிவாலய பக்தா்களுக்கு வழி எங்கிலும் தாகம் தீர்ப்பதற்காக மோர், பானகம், எலுமிச்சை சாறு அது போல் கஞ்சியும் பூசணிக்காயை கொண்டு எாிசோி குழம்பும் மேலும், கூட்டு பொரியல்களுடன் சாப்பாடு வழங்குகின்றனர்.

 

சிவாலய ஓட்டத்தையொட்டி குமரி மேற்கு மாவட்டத்தில் சாலைகள் எங்கும் அந்த பக்தர்களின் கூட்டத்தால் திக்குமுக்காடியது. இதனால் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. மேலும், பக்தர்களுக்கு வசதியாக 12 சிவாலயங்களுக்கும் செல்லும் விதமாக போக்குவரத்துத் துறை சாா்பில் மார்த்தாண்டத்திலிருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டது. இதையொட்டி குமரி மாவட்டத்திற்கு உள்ளூா் விடுமுறையும் விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.