Skip to main content

கந்துவட்டி கொடூரம்... விசைத்தறி தொழிலாளி தற்கொலை...!

Published on 26/09/2019 | Edited on 26/09/2019

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மகளிர் குழுக்கள் மூலம் கடன் வழங்கும் பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மகளிர் குழுக்கள் மூலம் ஒரு நபர் கடன் பெற்றால் அவர் திருப்பி செலுத்தவில்லை என்றால் அக்குழுவில் மீதி உள்ள பெண்கள் கடன் செலுத்தாத பெண்ணின் வீட்டிற்கு நேரடியாக சென்று பணத்தை வசூலிக்கும் முறை உள்ளது. ஒரு குழுவில் கடன்பெற்று அந்த கடனை அடைக்க முடியாமல் வேறுகுழுவில் கடன் வாங்கி ஏற்கனவே கடன்பெற்ற குழுவிற்கு பணத்தை செலுத்துவதும், அதற்கு வட்டிக்கு வட்டி என அதிகரித்து  மேலும் சில குழுக்களில் பணம் பெறுவதும் இப்படி பல்வேறு மகளிர் குழுக்களில் பணம் வாங்கி அதை திருப்பி செலுத்த முடியாமல் பலர் தற்கொலை முடிவை நாடி வருகிறார்கள். இப்படி குமாரபாளையத்தில் மட்டும் கடந்த 2 மாதத்தில் ஆறு தற்கொலை நடந்துள்ளது.  

 

 Electricity worker commits suicide ...


இதன் தொடர்ச்சியாக குமாரபாளையம் விட்டலபுரியை  சேர்ந்த ராஜு என்பவர் விசைத்தறி தொழிலாளி. இவர் மனைவி விசாலாட்சி 2. இவர்களுக்கு ஆண் குழந்தைகள் உள்ளது. ராஜு விசாலாட்சி தம்பதியினர் ஒரு மகளிர் குழுவில் கடன்பெற்று அதை அடைக்க முடியாமல் மற்றொரு மகளிர் குழுவில் கடன்வாங்கி இப்படி நான்கைந்து குழுவில் கடன்வாங்கி பணத்தை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர்.

கடும் நெருக்கடிக்கு ஆளான ராஜு நேற்று இரவு தனது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜு போல ஏராளமானபேர் இந்த மகளிர் குழு என்கிற நவீன கந்துவட்டி கும்பலால் தற்கொலை செய்துள்ளார்கள். இதற்கு ஒரு முடிவும் தீர்வும் வேண்டுமென குமாரபாளையத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் இன்று காலை முதல் போராட்டத்தில் இறங்கி வருகிறது. இதனால் குமாரபாளையம் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.