Skip to main content

குளித்தலை இரட்டை கொலை: காவல்நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டி கிராமம். இங்கு அரசுக்கு சொந்தமான குளம் உள்ளது. இது பல ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும் அப்பகுதியை சேர்ந்த ராமர் மதுரை ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு
தொடர்ந்தார்.

 

Kulithalai

இந்த நிலையில் ராமர் மற்றும் அவரது மகன் ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இரட்டை கொலை சம்மந்தமாக குளித்தலை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

இந்த இரட்டை கொலையை நடத்தியது ஜெயகாந்தன் என்ற 19 வயதுடைய இளைஞன் என்றும், இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது என்றும் கூறப்படுகிறது.ஜெயகாந்தன் மீது பல வழக்குகள் உள்ளது என்பதால் அவரது பின்புலத்தில் அரசியல் செல்வாக்கு உள்ளதா என விசாரித்தால், அதுபோன்று ஒன்றும் இல்லை என்றும் கூறப்படுகிறது. 
 

இந்தநிலையில் ளித்தலை காவல்நிலைய ஆய்வாளர் பாஸ்கரனை, திருச்சி மத்திய மண்டல காவல்துறை டிஐஜி பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
 

இரட்டை கொலை நடந்த உடனேயே துரிதமாக செயல்பட்டு ஜெயகாந்தனை கைது செய்திருக்கலாம் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலும்  காவல்நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

குளித்தலையில் பரபரப்பு; போலீசாரை கண்டித்து சாலை மறியல்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

People blocked the road in Kulithalai to condemn the police

 

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் விவசாய கூலித் தொழிலாளி ஆறுமுகம்(70). இவர் நேற்று மாலை மேட்டுமருதூரில் இருந்து பணிக்கம்பட்டிக்குச் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பருடன் கூடிய டிராக்டர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.  உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில், இன்று முதியவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய இருந்த நிலையில், அங்கு வந்த போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் என வழக்குப் பதிவு செய்திருந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரைக் கண்டித்து திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியலைக் கைவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

Next Story

‘தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ - விசிக ஆர்ப்பாட்டம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

vck members struggle at Kulithalai

 

தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்து விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  

 

கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றிய விசிக சார்பில் நேற்று, குளித்தலை பேருந்து நிலையம் காந்தி சிலை முன்பு, குளித்தலை அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், குளித்தலை ஒன்றிய பகுதிகளில் நடைபெறும் தீண்டாமை பாகுபாடுகளை அறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,  மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், குளித்தலை பேருந்து நிலைய விரிவாக்க பணி முடிந்தும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

 

விசிக ஒன்றிய செயலாளர் மாயவன் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.