Skip to main content

தசரா திருவிழா... குலுங்கியது குலசை..!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

மைசூரின் சாமுண்டீஸ்வரி ஆலய தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. அதையொட்டினார் போன்றிருப்பது தமிழகத்தின் குலசை என்றழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா.

 

kulasai vijayadasami function

 

 

தூத்துக்குடி மாவட்டத்தின் குலசை, நவராத்திரியின் 9ம் நாளான ஆயுத பூஜையின் மறுநாள் விஜய தசமியன்று குலசையில் தசரா திருவிழா அமர்க்களப்படும். அன்றைய தினம் மட்டும் தமிழகம் முழுவதிலுமிருந்து காலையிலிருந்து இரவு வரை தரிசனத்திற்காக வரும் பக்தர்களால் அந்தச் சிறிய கிராமமே குலுங்கும். அன்றைய தினம் சுமார் 20 லட்சம் பக்தர்கள் அன்னையை தரிசனம் செய்துவிட்டுச் செல்வர் என்கின்றனர் அந்தப் பகுதியினர். இதனால் போக்குவரத்து கூட நகரில் பல பகுதியில் திருப்பிவிடப்பட்டு பக்தர்களுக்காக வெகு தொலைவிலேயே நிறுத்தப்பட்டுவிடும்.

குலசையின் ஞான மூர்த்தீஸ்வர சிவலிங்கம் சுயம்புவாக உருவானது. சிவபெருமானும், பார்வதியம்மையும் அதிசயமாக ஒருசேர அமர்ந்திருப்பது இங்கு விசேஷம். இத்துறைமுகத்தின் முகத்துவாரத்தில் அமைந்திருக்கும் குலசை முத்தாரம்மனை வழிபட்டுவிட்டு கடல்வணிகம் மேற்கொள்ளும் வணிகர்கள் நெருக்கடியின்றி திரும்பி, நேர்ச்சையை செலுத்துவர், என்பது வரலாறு. அதன்படி குலசை ஆலயம் வந்து காப்புக்கட்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் ஒவ்வொறு குழுவாகச் செயல்படுவர்.

அவ்வாறு விரதம் மேற்கொள்ளும் போது, காளி, பத்ரகாளி, ராமர், வாலி, 12 கையுடன் கூடிய திரிலோக அம்மன் என்று தங்களின் விருப்பப்படி வேடம் தரித்து இன்று குலசை நோக்கி வந்தனர். ஒவ்வொறு குழுவும், தாரை தப்பட்டை, ராஜமேளம் என்று தரையதிர வாத்தியமிசைத்து வருவதால், காவல்துறை அதற்கு ஏற்றார் போன்று சோதனைசாவடியோடு அவற்றிற்கு தடைவிதித்ததோடு, அம்மனுக்கு உகந்த மேளம் மட்டுமே இசைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தனர். காவல்துறையின் அறிவுறையின்படி அதனை மேற்கொண்டனர் பக்தர்கள். காலை முதலே முத்தாரம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்த வண்ணமிருந்தது. விஜயதசமியான இன்று அம்மனை நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசித்தனர். அதிகாலை முதல் இரவுவரை வழிபாடு தொடர்ந்து நடைபெற்றது. நள்ளிரவு 12 மணியளவில் கடற்கரையில் நடக்கும் சூரவதம் விழாவை காண பல லட்சம் பக்தர்கள் திரளுவர் என்பதால் மாவட்ட எஸ்.பி.யான பால அருண் கோபாலன் தலைமையில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். சூரவதம் முடிந்த காலை சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் நீராடி காப்புகளை நீக்கி தங்களின் விரதத்தை முடிப்பது பக்தர்களின் வழக்கமாக உள்ளது. 

 

ad

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாஜகவில் சேர்ந்த தமிழிசை; தேர்தலில் மீண்டும் வாய்ப்பா?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
Tamilisai joined BJP; A SEAT again?

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி இருக்கும் நிலையில் இன்று திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை மீண்டும் பாஜகவில் சேர்ந்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்தார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றார். மேலும் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராகவும் பதவி வகித்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மீண்டும் அவர் பாஜக அடிப்படை உறுப்பினர் பதவியை பெற்று பாஜகவில் இணைந்துள்ளார். இதனால் தமிழிசைக்கு பாஜகவில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அப்படி வாய்ப்பளித்தால் மீண்டும் தூத்துக்குடியில் தமிழிசை நிற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கெனவே திமுகவில் கனிமொழி தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளராக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

விபரீத இன்ஸ்டா ரீல் இளைஞர்கள் கைது; போலீசார் எச்சரிக்கை

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
nn

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ போலீசாரின் கவனத்திற்கு சென்ற நிலையில் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம் தருவைகுளத்தில் விபரீதமாக மண்ணுக்குள் குழிதோண்டி அதனுள் இளைஞரை தலைகீழாக புதைத்து சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுத்த போலீசார் ரஞ்சித் பாலா அவரது நண்பர்கள் சிவக்குமார், இசக்கி, ராஜா ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தற்போது கைது செய்துள்ளனர். மேலும் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.