Skip to main content

தினகரனுடன் குண்டர்கள்! -ரவுடி விமர்சனத்துக்கு ராஜேந்திரபாலாஜி பதிலடி! 

Published on 05/03/2019 | Edited on 05/03/2019

 

சிவகாசியில் சீவலப்பேரி கூட்டுக் குடிநீர்த் திட்டப்பணி சோதனை ஓட்டத்தை பார்வையிட்ட அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி இதோ -  

 

k

 

தேர்தல் தேதி அறிவிப்பு வரும் வரை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவோம். ஓபிஎஸ் நேற்று விஜயகாந்தைச் சந்தித்ததன் மூலம் அதிமுக, தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது.  நானா ரவுடி?  தினகரனுடன் உள்ளவர்கள்தான்  குண்டர்கள்  போல் செயல்படுகிறார்கள். அதைக் கண்டிக்கக் கூடாதா? கண்டித்தால் தப்பா? உண்மையை சொன்னால் கசக்கத்தான் செய்யும். நாங்கள் திண்ணையில் உட்காருவோமா? தினகரன் பண்ணையில் உட்காருவாரா? என்பதை தேர்தலுக்குப் பின்  பார்ப்போம். அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூறலாம். தினகரன் திருந்தி அதிமுகவுக்கு வந்தால் என்பது போன்ற கேள்விக்கெல்லாம் முதல்வர், துணை முதல்வர்தான் பதில் சொல்ல முடியும். 

 


தினகரன் குடும்பத்தில் எனக்கு உதவியவர்கள் தற்போது அவரிடம் இல்லை. தினகரன் தனிமரமாக இருக்கிறார்.  அவர் வெற்றிக்கு நாங்கள் பணியாற்றியிருப்போம், அவரும் உதவி செய்திருப்பார்.  அது அரசியல் ரீதியான உறவு. அதற்காக,  அதிமுக வை அவர் அழிக்க நினைத்தால் வேடிக்கை பார்க்க முடியாது. டிடிவியின்  நடவடிக்கை அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டிலும், திமுக ஆதரவு நிலைப்பாட்டிலும் உள்ளது.  முதல்வர் எடப்பாடி மீது அவதூறு பேசுவதால்தான்  என்னைப் போன்றவர்கள் பேச வேண்டியதிருக்கிறது. மற்றபடி,  தனிப்பட்ட முறையில் அவரைத் தாக்குவது என்னுடைய  இயல்பு கிடையாது.  மரபும் கிடையாது.

 

k


21  தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத் தேர்தல் எங்களுக்கு முக்கியம்தான் அதிலென்ன சந்தேகம்? எடப்பாடி ஆட்சியைத் தக்க வைப்பதற்கு  எங்களுடைய இலக்கு சட்டமன்ற தொகுதிகள் எனச்சொல்வது உண்மைதான்.   திமுகவுக்கும் அதிமுகவுக்கும்  அரசியல் ரீதியாக மோதல் உள்ளது. அதனால்,  அவர்கள் எங்களை நல்லபடியாகச் சொல்ல மாட்டார்கள்.


.உறுதியான இந்தியா, மகிழ்வான தமிழகம்.  தைரியமான், நேர்மையான பிரதமராக மோடி  இருக்கிறார்.  வலுவான பாரதம், வல்லரசு நாடாக உருவாக,  நரேந்திர மோடி பிரதமர் ஆக எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும்.

 

தன்னுடைய சொந்த நிலைப்பாடு குறித்தும், கட்சியின் நிலைப்பாடு குறித்தும்  வெளிப்படையாக ‘உண்மை’ பேசுவதால், தனிப்பட்ட முறையில் தனக்கு எதுவும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்ற பயமே இல்லாமல், செய்தியாளர்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அதிரடியாகப் பதில் சொல்பவராக இருக்கிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்குவதில் தாமதம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

மத்திய அரசால், இந்திய குடிமகனுக்கான உயரிய விருதுகளாக பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என மூன்று அடுக்குகளாக இந்த விருதுகள் இருக்கிறது. இந்த விருதுகளுக்காக மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சமூக பணி, என பல்வேறு தளங்களில் சிறப்பாக பணியாற்றியவர்களை பரிந்துரை செய்யப்பட்டு பின்னர், விருது வழங்கும் குழுவால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரியில் அறிவித்தது. இதில் மறைந்த நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

padma bhushan award will be presented to Vijayakanth in the next phase of the ceremony.

பத்ம விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (22.04.2024) நடைபெற்ற விழாவில் 3 பத்ம விபூஷன், 8 பத்ம பூஷன் மற்றும் 55 பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன. அனைவருக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். இதில் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

நேற்றைய விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படுவதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விருது வழங்கப்படவில்லை. அதனால் அடுத்தடுத்த கட்ட விழாக்களில் விஜயகாந்துக்கு விருது வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

அரசியல் வருகை குறித்த கேள்விக்கு சண்முகப்பாண்டியன் பதில்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
shanmuga pandian press meet

விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முகப் பாண்டியன் சகாப்தம், மதுர வீரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது படைத் தலைவன் படத்தில் நடித்து வருகிறார். டைரக்டர்ஸ் சினிமாஸ் தயாரிப்பில், உருவாகும் இப்படம் காட்டு யானைகளின் வாழ்வியலை மையப்படுத்தி ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது. யு. அன்பு இயக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். மேலும் ராகவா லாரன்ஸ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். 

இந்த நிலையில் இன்று சண்முகப் பாண்டியன் பிறந்தநாள் காண்கிறார். இதையொட்டி பிரேமலதா விஜயகாந்துடன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று விஜயகாந்த் மறைந்து 100 நாள் நிறைவடைகிறது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த இல்லாமல் முதல் பிறந்தநாளைக் காண்கிறார். அஞ்சலி செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம் விஜய பிரபாகரரை போல் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில் பதிலளித்த அவர்,  “நான் இப்போதைக்கு சினிமாவில் இருக்கிறேன். அண்ணன் அரசியலில் இருக்கிறார். அப்பாவின் ஒரு துறையை அண்ணன் எடுத்துக் கொண்டார். இன்னொரு துறையை நான் எடுத்துக்கொண்டேன்” என்றார். 

இதனிடையே சண்முகப் பாண்டியனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளனர் படைத் தலைவன் படக்குழு. அப்படக்குழுவினரும் சண்முகப் பாண்டியனோடு இணைந்து விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.