Skip to main content

“பிக்பாஸ் முடிந்ததும் கமல் அரசியலுக்குத் திரும்புவார்!” -கே.டி.ராஜேந்திரபாலாஜி கேலி!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

 

சிவகாசி அருகிலுள்ள எரிச்சநத்தம் கிராமத்தில் குடிமராமத்துப் பணிகள் மூலமாக கண்மாய்களைத் தூர்வாரும் பணிகளைத் துவக்கி வைத்து பூமி பூஜை போட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி .

 

k

 

“அமெரிக்காவில் வாழும் தமிழர்களின் மூலமாக புதிய தொழிற்சாலைகளை கொண்டு வருவதற்காகத்தான் முதல்வர் லண்டன் செல்கிறார். ஸ்டாலினுக்கு எங்களைக் குறை கூறுவது தான் வேலை. மத்திய அரசின் அனுமதியோடு மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவதற்காகத்தான் வெற்றிகரமான பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார். எடப்பாடியாரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும். நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக ஏற்றுக்கொள்ளும். பாஜகவோடு நல்ல உறவில் உள்ள இயக்கம் அதிமுகதான். தேசியத்தின் பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளது. 

 

b

 

திமுக பிரிவினையைத் தூண்டக்கூடிய கட்சி. தமிழக முதல்வர் எடப்பாடியார் தேசியத்தையும் தெய்வீகத்தையும் மதிக்கக்கூடியவர். அதிமுக ஆட்சியில் ஒரு சிறு எறும்புக்குக்கூட இடையூறு இருக்காது. திமுக தீவிரவாதத்திற்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கிறது. மத்திய உள்துறை எடுக்கும் பட்டியலில் இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்படுபவர் பட்டியலில் திமுக மாட்டினால் நாங்கள் என்ன செய்ய முடியும்? மாட்டினால் மாட்டியது தான். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அது நல்ல திட்டமாக இருந்தால் எந்த அரசியல் தலைவர்கள் சொன்னாலும் ஏற்றுக் கொள்வோம். அதில் எங்களுக்கு மாறுபட்ட வேறுபட்ட கருத்து இல்லை. 

 

அமமுகவில் போட்டியிடுவதற்கு வேட்பாளா்கள் இல்லை. அந்தக் கட்சியில் இருந்தவர்கள் அனைவரும் எங்களிடம் வந்து விட்டார்கள். தேர்தல் களத்தில் அதிமுக,  திமுக தான் போட்டியிடும். அதில் அதிமுகதான் வெற்றிபெறும். அதை திமுகவினர் வேடிக்கை பார்ப்பார்கள்.

 

திமுகவினருக்கு சுதந்திர உணர்வு இருக்கிறதா?  இவர்கள் வெள்ளைக்காரனிடம்  காட்டிக்கொடுத்த இயக்கத்திலிருந்து வந்தவர்கள் போல் பேசுகிறார்கள். கமல்ஹாசன் கட்சி திடீரென பெய்த மழையில் முளைத்த காளான் போல.  திடீரென வருவார்கள்; போய் விடுவார்கள் தற்போது பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சி நடக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் கமல் மீண்டும் அரசியலுக்கு வருவார்.” என்றார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஆஜர்

Published on 15/02/2022 | Edited on 15/02/2022

 

kt rajendra balaji

 

அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை மோசடி செய்ததாகப் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர், கடந்த ஜனவரி 5ஆம் தேதி ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். அதன்பிறகு, உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ராஜேந்திர பாலாஜி, கடந்த சனிக்கிழமை விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அப்போது அவரிடம் 11 மணி நேரம் தொடர் விசாரணை நடைபெற்றது.

 

இந்நிலையில், இன்றும் விசாரணைக்காக ராஜேந்திர பாலாஜி அழைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விருதுநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவர் ஆஜராகியுள்ளார். அவரிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.  

 

 

Next Story

கே.டி.ராஜேந்திரபாலாஜி தொகுதி மாறியது ஏன்? - 2 தொகுதிகளை விட்டுக்கொடுத்த விருதுநகர் அ.தி.மு.க.! 

Published on 10/03/2021 | Edited on 10/03/2021

 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI

 

விருதுநகர் மாவட்டத்தில், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை மற்றும் திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் விருதுநகர், திருச்சுழி ஆகிய இரண்டு தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு, மீதியுள்ள 5 தொகுதிகளில் அ.தி.மு.க. போட்டியிட முடிவெடுத்து, கீழ்க்கண்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளது.  

 

1.ராஜபாளையம்          - கே.டி.ராஜேந்திரபாலாஜி
2.ஸ்ரீவில்லிபுத்தூர்      - இ.எம்.மான்ராஜ்
3.சாத்தூர்                       - ஆர்.கே.ரவிச்சந்திரன்
4.சிவகாசி                      -  லட்சுமி கணேசன்  
5.அருப்புக்கோட்டை  - வைகைச்செல்வன்

 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI


விருதுநகர் அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் நேரடியான மோதல் போக்கைக் கடைப்பிடித்து வந்த சிட்டிங் (அ.தி.மு.க) சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கு இந்தத் தேர்தலில் சீட் இல்லை.  

 

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்ட திருச்சுழி மற்றும் விருதுநகர் தொகுதிகள், இந்தத் தடவை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

 

விருதுநகர் மாவட்டத்தில் அ.ம.மு.க.-வுக்கென்று வாக்கு வங்கி உள்ளது. அதேபோல், தே.மு.தி.க. ஆதரவு வாக்குகளும் கணிசமாக உள்ளன. அ.தி.மு.க.வுக்கு விழவேண்டிய வாக்குகளை இவ்விரு கட்சிகளும் பிரிப்பதாலேயே, கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளை, அ.தி.மு.க. தலைமை தாராளமாக விட்டுக்கொடுத்துள்ளது. 
 

TN ASSEMBLY ELECTION ADMK CANDIDATES LITS KT RAJENDRA BALAJI

 

கே.டி.ராஜேந்திரபாலாஜியை, கடந்த தேர்தல் வரையிலும், அ.தி.மு.க. வேட்பாளராக மட்டுமே பார்த்து வந்தது, சிவகாசி தொகுதி. முன்னாள் அ.தி.மு.க. எம்.பி. ராதாகிருஷ்ணன் பார்த்த உள்ளடி வேலைகளால், கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சாதி அடிப்படையில் வாக்குகள் மாறி விழ, சிவகாசி யூனியன் தி.மு.க. வசமானது. சட்டமன்றத் தேர்தலிலும், இந்த உள்ளடி தொடரும் என்பதால், சிவகாசி தொகுதியை விட்டு ராஜபாளையம் தொகுதிக்கு மாறியிருக்கிறார் கே.டி.ராஜேந்திரபாலாஜி.