Advertisment

காங்கிரஸ் கட்சியினர் நடத்திய கண்டன பேரணி... தலைமை தாங்கிய கே.எஸ். அழகிரி! (படங்கள்)

இன்று (22.07.2021) வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலை அருகிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் போன்றோர் வேவு பார்க்கப்பட்டது குறித்து, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு உத்திரவிடக் கோரி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி கண்டன பேரணி நடைபெற்றது.

Advertisment

மேலும், இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார். இப்பேரணியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், செயல் தலைவர்கள், நாடாளுமன்ற -சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

Advertisment

protest congres
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe