Skip to main content

சொந்த ஊரில் கிருஷ்ணசாமியின் உடல்- கதறிய மனைவி, மகள்

Published on 07/05/2018 | Edited on 07/05/2018

திருவாரூரிலிருந்து நீட் தேர்விற்காக எர்ணாகுளம் சென்ற கஸ்தூரி மகாலிங்கம் என்ற  மாணவனின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் நேற்று  உயிரிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

 

எர்ணாகுளம் நலந்தா பப்ளிக் பள்ளியில் நீட் தேர்வெழுத சென்ற திருவாரூர் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வெழுதும் நேரத்தில் அறையில் தங்கிருந்த அவரது அப்பா கிருஷ்ணசாமி மாரடைப்பால் நேற்று உயிரிழந்தார். தேர்வு முடித்துவிட்டு வெளியே வந்த அந்த மாணவன் தன் அப்பாவின் இறப்பு குறித்து அறிந்து துடிதுடித்து போனான். 
 

neet

 

தற்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சிறப்பு வட்டாட்சியர் இன்னாசிராஜி மற்றும் காவல் ஆய்வாளர் ராஜகோபால் ஆகியோர் தலைமையிலான குழு உடலை பெற நேற்று எர்ணாகுளம் விரைந்து உடலை பெற்று ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மாலை 4.30 க்கு மணிக்கு திருவாரூர் புறப்பட்டு இன்று காலை சுமார் 2 மணி அளவில் சொந்தஊரான விளக்குடியை வந்தடைந்தது.
 

neet

 

 

neet

 

 

neet

 

அவரின் உடலின் வருகைக்காக அந்த ஊர் மக்கள் குடும்பத்தார் என அனைவரும் கண்ணீர் பெருத்த துயரத்துடன் காத்திருந்தனர். அவர் உடல் வந்தடைந்ததும் அவரது குடும்பத்தார் கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

 

அவரது உடலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ்,தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனால் அந்தப்பகுதி சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு; தேசிய தேர்வு மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Important notification For students appearing for NEET

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 9 ஆம் தேதி இரவு 9 மணி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இன்றுடன் கால அவகாசம் நிறைவடைய இருந்த நிலையில், மார்ச் 6 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.