Advertisment

பாரூர் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு!

KRISHNAKIRI DISTRICT BARUR LAKE CM ORDER

பாரூர் பெரிய ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisment

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருமக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், பாரூர் பெரிய ஏரியின் இரு பிரதானக் கால்வாய்களில் இரண்டாம் போக பாசனத்திற்கு பாரூர் பெரிய ஏரியிலிருந்து 14/12/2020 முதல் 12/04/2021 வரை மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

Advertisment

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிப்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும்.' இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து வலது, இடது பாசன வாய்க்காகளில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 9,012 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

cm edappadi palanisamy Lake krishnakiri
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe